India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொடுமுடி தாலுகா சிவகிரி அடுத்த வேட்டுவபாளையத்தில் , இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், பழமை வாய்ந்த புத்தூரம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நீண்ட நாட்களாக திருப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில் வேட்டுவபாளையம் ஊர் மக்களின் முயற்சியுடன், பழமை மாறாமல், பூரண ஆகம நிலையுடன் 3 நிலைகளைக் கொண்ட பிரதான கருவறை கோபுரம், முன் மண்டபம் ஆகியவை அழகிய முறையில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை வாட்டி வந்தது. கடந்த 2ம் தேதி இதுவரை இல்லாத அளவாக உச்சபட்சமாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். தற்பொது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் இன்று 100 டிகிரிக்கு கீழாக 96.44 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.
கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி விவசாயம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 139 மஞ்சள் மூட்டைகள் குடோனில் வைத்ததாக சொல்கிறார். தற்போது மஞ்சள் மூட்டைகளை திருப்பி எடுக்க செல்லும் போது மஞ்சள் மூட்டைகளை வைத்தற்கான ஆதாரத்தை கூட்டுறவு செயலாளர் நடராஜ் கேட்டதால் மனமுடைந்த இவரும், மனைவி அஞ்சலி தேவி டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சி செய்தனர்.
ஈரோட்டில் இருந்து வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஈரோட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும், ஈரோடு புத்தகத் திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 13 வரை 12 நாட்களுக்கு ஈரோடு மாநகரில் நடைபெறவுள்ளது. மேலும் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா – புத்தகத் திருவிழாவின் 20ஆம் ஆண்டு ஆகிய காரணங்களினால் இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது.
நாமக்கல்லில் இருந்து ஈரோடு வழியே தவிடு பாரம் ஏற்றிய லாரி பெருந்துறை நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு அடுத்த பெரியசடையம்பாளையம் ரிங் ரோடு பகுதியில் லாரி திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் கோவிந்தராஜன் (34) எந்த காயங்களும் இன்ற உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த ஈரோடு தலுகா போலீசார் லாரியை மீட்டு விசாரணை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே விஜயகுமார் என்பவர் நேற்று தனது தாய் சுசீலாவை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்தார். இதில், காயமடைந்த சுசீலாவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விஜயகுமார் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்(ஐ.டி.ஐ) உள்ளது. இந்த பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7ம் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244, 9499055703 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் – பர்கூர் மலைப்பகுதியில் இன்று(மே 15) அதிகாலை 6 மணியளவில் காங்கேயத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் கொல்லேகாலில் இருந்து கால்நடை தீவனம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி தட்டகரை அருகே மலை பாதையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ஜெபி(35) பரிதாபமாக உயிரிழந்தார். பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்தியூர் அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் 3,866 தேங்காய்கள் ரூ.34,687 க்கும்,
67 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1,76,322 க்கும் ஏலம் போனது. 334 மூட்டை நிலக்கடலை ரூ.8,46,244-க்கும், 20 மூட்டை எள் ரூ.1,59,256-க்கும் ஏலம் போனது. மொத்தம் வேளாண் விளை பொருட்கள் ரூ.12,16,509 க்கு ஏலம் போனதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.