Erode

News May 26, 2024

திருடனை மும்பை சென்று தூக்கிய போலீஸ்

image

மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் ரிங்ரோட்டில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் கடந்த ஆண்டு(01.02.2023) இரண்டு நபர்கள் ரூ.48,000 கொள்ளையடித்து சென்றனர். அடுத்த 24 மணி நேரத்தில் குமரேசனை போலீசார் கைது செய்த நிலையில் தப்பி ஓடிய இசக்கி பாண்டி (24) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்கு பிறகு இசக்கி பாண்டியை போலீசார் மும்பையில் கைது செய்து பணத்தை மீட்டு  இன்று மொடக்குறிச்சிக்கு அழைத்து வந்தனர்.

News May 25, 2024

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான சந்தைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் தங்கள் செல்போன்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். செல்போனை ஆண்கள் சட்டையின் மேல் பாக்கெட்டில் வைப்பதால் திருடு போக அதிக வாய்ப்புள்ளது. எனவே செல்போனை சட்டையின் மேல் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்த கூடாது என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

News May 25, 2024

ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் சிறப்பு!

image

ஈரோடு நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில். இக்கோயில் லட்சுமிகாந்தன் என்ற சோழ அரசனால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. புராணக்கதைகளைக் கொண்ட இக்கோயில் திராவிடக்கலை உடன் கட்டப்பட்ட 5 அடுக்கு ராஜ கோபுரத்துடன் திகழ்கிறது. மகாமண்டபத்தின் மேற்கூரையில், பல சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை சுண்ணாம்பு மற்றும் மணலால் செய்யப்பட்டவை.

News May 25, 2024

ரயிலில் கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

image

ஈரோடு ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வட மாநில இளைஞர்களை சுற்றி வளைத்து மதுவிலக்கு போலீசார் கைது. மேலும் இவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ள வட மாநிலத்தவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 25, 2024

ஈரோடு: பள்ளிகளில் 28ஆம் தேதி குலுக்கல்

image

ஈரோடு மாவட்டத்தில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 25% இட ஒதுக்கீட்டில், 104 மெட்ரிக் பள்ளிகள், 1 சுயநிதி பள்ளி, 77 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2,299 இடங்களுக்கு 3,137 பேர் விண்ணபித்துள்ளனர் . அந்தந்த பள்ளிகளில் உள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் வரும் 28ஆம் தேதி குலுக்கல் நடைபெறும் என ஈரோடு கலெக்டர் தெரிவித்தார்.

News May 25, 2024

மதுரை வீரன் கோயில் கல்யாண உற்சவம்

image

மொடக்குறிச்சி தாலுகா புது அண்ணாமலை பாளையத்தில் வடமதுரை மதுரைவீரன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 17ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி 23ஆம் தேதி காலை பக்தர்கள் காவிரி ஆறு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் விழா மகா அபிஷேகம், அன்னதானம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

News May 24, 2024

ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

நாளை குடிநீர் விநியோகம் ரத்து 

image

ஈரோடு மாநகராட்சியின் ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி நாளை (மே.25) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் சிக்கனமாக குடிநீரை பயன்படுத்த வேண்டும் என  ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே தங்கள் பகுதியில் எழுத, படிக்க தெரியாதவர்கள் இருப்பின் அருகில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!