India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவ-மாணவிகள் 2024-25ஆம் ஆண்டுக்கான முதுநிலை பி.எச்.டி., மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்புகளை வெளிநாடுகளில் தொடர விண்ணப்பிக்கலாம். இதற்கு https://overseas.tribal.gov.in என்ற இணைய வழியில் இன்று மாலைக்குள் (மே 31) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை https://overseas.tribal.gov.in இணையதளத்தில் அறியலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் நிறைவடைந்தும் பெயர் பதிவு செய்யாமல் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ரூ.200 கால தாமத கட்டணம் செலுத்தி ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பித்தவர்களுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி அரசு மதுபானத்தை விற்ற நபரிடமிருந்து சுமார் 650 மது பாட்டில்கள் பறிமுதல் செய்ததற்காக மற்றும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட, ரூ.3,10,000 மதிப்புள்ள 20.600 Kg கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சண்முகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர்.இ.கா.ப., பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.ஜவகர் இ.கா.ப., கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. பத்திரம் எழுதும் பணி செய்கிறார். கால்பந்து வீரரான சுப்பிரமணி இன்று காலை வழக்கம் போல் வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்து விழுந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுபற்றி ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் உள்ள சென்னிமலை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணியசாமி கோயில். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற கருத்தும் உள்ளது. இங்கு மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேசுவரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு சன்னதிகள் உள்ளன.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்த தனது தாயை உள்ளே கொண்டு செல்ல, மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் பெண் ஒருவர் அலைக்கழித்ததாக வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது எக்ஸ் தளத்தில், பாமர மக்களுக்கு அடிப்படை வசதியை கூட ஏற்படுத்தி கொடுக்க முடியாத
‘சந்தி சிரிக்கின்ற போலி திராவிட மாடல் அரசு’ என கண்டித்து பதிவிட்டுள்ளார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் காலாவதியான ஆவின் பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதியான ஆவின் பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்படுவது மக்களிடையே ஆவின் மீதான நம்பிக்கையை தகர்கிறது. இது போன்ற செயல்களால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் நிலை உருவாகும். எனவே தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் சொர்ணா(80). இவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட காயம் காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். இவரை அழைத்துச்செல்ல ஸ்ட்ரெச்சர் இல்லாததால் அவரது மகள் வளர்மதி அவரை தூக்கிச்செல்லும் வீடியோ வைரலானது. இது தொடர்பாக கண்காணிப்பாளர், ஆர்.எம்.ஓ விடம் விளக்கம் கேட்டு சுகாதார இணை இயக்குனர் மெமோ அனுப்பியுள்ளார்.
கோபி அருகே உள்ள பெருமுகை கிராமம் கரும்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் எனவும் கால்நடைகளை பாதுகாக்க வைக்க வேண்டும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிறுத்தையை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.