Erode

News June 3, 2024

தாளவாடி: மூங்கில் மரம் விழுந்து பாதிப்பு

image

தாளவாடி அடுத்த ஆசனூர், திம்பம், கேர்மாளம், திங்களூர் ஆகிய பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. கேர்மாளம் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் காடுபசுவன்பாளையம் அருகே மூங்கில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாததால் மலைக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

News June 3, 2024

ஈரோடு: ரூ.4.63 லட்சம் நகை மீட்பு

image

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் நகர பகுதியில் சுமார் ரூ.4,63,000 மதிப்புள்ள காணாமல் போன தங்க நகையை சிசிடிவி-கேமரா உதவியுடன் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த நகர குற்றபிரிவு காவலர்களை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.ஜவகர் சான்றிதழ்கள் வழங்கினார்.

News June 2, 2024

மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

image

தாளவாடி அருகே கேர்மாளம், திங்களூர் ஊராட்சி சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக 50 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலை கெத்தேசால் அருகே மின் கம்பி மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மலைகிராம மக்கள் அவதியடைந்தனர். 

News June 2, 2024

ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

image

பவானி அரசு மருத்துவமனையில்,
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான நாளை (ஜூன்.3) பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கருணா என பெயர் சூட்டி தங்க மோதிரம் மற்றும் வெள்ளி கொலுசு பரிசாக வழங்கப்பட உள்ளது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 2, 2024

கல்லூரி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

image

ஈரோடு அருகே தனியார் கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் கல்லூரி விடுதியில் நேற்றிரவு உணவு சாப்பிட்ட 80-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News June 2, 2024

மாநில எல்லையில் வன சோதனை சாவடி

image

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் மாநில எல்லையான பாலாற்றில் வனத்துறை மற்றும் காவல் துறை சார்பில் சோதனை சாவடி அமைக்க ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் மாநில எல்லையான பாலாற்றில் வன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

ஈரோடு கொடிவேரி அருவி சிறப்புகள்!

image

ஈரோடு கொடிவேரி அணைக்கட்டு பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகும். இது கோபிசெட்டிபாளையத்தின் அருகே பெரியகொடிவேரியில் அமைந்துள்ளது. 1125ஆம் நூற்றாண்டில் செம்ப வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானால் கட்டப்பட்டது. 3 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த அணை, திறப்பதற்கு முன் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீண்டும் 2 முறை முயற்சிக்குப் பின் கட்டப்பட்டது.

News June 1, 2024

அந்தியூர் பகுதியில் இரவில் சாரல் மழை

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த வரம் மழை பெய்தது. பின்னர் கடந்த 3 நாட்களாக மீண்டும் வெயில் வாட்டியது. இந்நிலையில் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு 10:30 மணிக்கு மேல் சுமார் 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

News May 31, 2024

பள்ளத்தில் பாய்ந்த சரக்கு வேன்

image

தாளவாடி அடுத்த ஏரகனள்ளியில் இருந்து இன்று தாளவாடி நோக்கி சரக்கு வேன் கொண்டிருந்தது. தர்மாபுரம் அருகே அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளத்தில் விழுந்த சரக்கு வேனை மீட்டனர். இவ்விபத்து குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 31, 2024

ஈரோடு: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோட்டில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!