India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு காரீப் – 2025 பருவத்தின் பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது. அதற்கு ஹெக்டருக்கு ரூ.300 முதல் பிரீமியத் தொகை செலுத்தி ரூ.30,000 வரை பயிர் இழப்பீடு பெறலாம். மேலும் செப்.16 க்குள் அரசு பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அறிவித்தார்.
அந்தியூர் குருநாதசாமி ஆடித் தேர் திருவிழா இன்று தொடங்கியது. திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார். தொடர்ந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். குதிரை சந்தையும் பார்வையிட்டார். அவருக்கு அஇஅதிமுகவின் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
ஈரோடு மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
ஈரோடு, சம்பத் நகரில் உள்ள நவீன நூலகத்தில் நூலகர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பங்கேற்றார். தொடர்ந்து, அங்கு உள்ள நூலக தந்தை டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த வாசகர்களுடன் ஆட்சியர் கலந்துறையாடினார்.
ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் கந்தசாமி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டு அறிந்து மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்பது குறித்து பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டு அறிந்தார்.
ஈரோடு மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <
▶ஈரோடு மாவட்ட ஆட்சியர் – 0424-2260211. ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0424-2266333. ▶மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) – 0424-2260999. ▶மாவட்ட வழங்கல் அலுவலர் – 0424-2252052. ▶மாவட்ட சமூக நல அலுவலர்- 0424-2261405. ▶மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 0424-2275860. ▶மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் – 0424-2260255. ஈரோடு அரசு மருத்துவமனை – 0424-2253676. இதை SHARE பண்ணுங்க.
ஈரோட்டில், தமிழ்நாடு அரசு உதவி பெறும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், தற்போது காலியாக உள்ள 14 Junior Assistant(இளநிலை உதவியாளர்), Store Keeper, Lecturer (English, Chemistry), HOD பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் இளநிலை உதவியாளர், Store Keeper பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <
ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச CNC Operator – Turning பயிற்சி வழங்கப்படவுள்ளது. 63 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், CNC machines,தொடர்பான அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க<
ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட்.15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மதுபான, மதுக்கூடங்கள், மதுபான விடுதிகள், பார்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து அன்று முழுவதும் மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எனவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.