India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு பெரிய சேமூர் அடுத்த அம்மன் நகர் சாத்வித் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இதன் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட அந்த வசிக்கும் 17 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பொதுமக்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் நாயை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

ஈரோடு மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

அந்தியூரைச் சேர்ந்த சேதுராஜ், மகாலட்சுமி ஆகியோர் டிசம்பர்-5 அன்று திருமணம் செய்து, பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 9ஆம் தேதி பெண்ணின் உறவினர்கள் மகாலட்சுமியை கடத்தினர். மேலும் பெருந்துறை போலீசார் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இதில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணவாய்க்கால் பகுதியில், காவிரி ஆற்றில் உடல் அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உடலை மீட்டு உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பெரிய சேமூர் அடுத்த அம்மன் நகர் சாத்வித் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இதன் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட அந்த வசிக்கும் 17 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த பொதுமக்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் நாயை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

ஈரோடு விஜயமங்கலம் டோல்கேட் அருகே வரும் 18-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இக்கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்பதால், அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று கோயில் செயல் அலுவலர் சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தவெகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் 13ஆம் தேதி அனைத்து தாலுக்காவிலும் தலா ஒரு ரேசன் கடையில் நடைபெற உள்ளது. இதில், புதிய முகா ரேஷன் கார்டு கோருதல், நகல் ரேஷன் கார்டு கோருதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு 1995 முதல் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்குகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பணிபுரிபவர்கள் இவ்விருதிற்கு
18.12.2025க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 4வது தளம், ஈரோடு என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.