India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருந்துறை அருகே தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரகு (29). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரத்தைப் பறித்துச் சென்றது. இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்படுருந்தநிலையில் தலைமறைவாக இருந்த பால கண்ணன் (39) மற்றும் கல்லூரி மாணவரான கார்த்திகேயன் (20) ஆகிய இருவரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஈரோடு, பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் ,அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் ராஜ் இவரது மனைவி ஜானகி வயது 30, இவருக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேஷ் ராஜ் மில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் திரும்பி நள்ளிரவு வந்த பொழுது அவரது மனைவி ஜானகி தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக்கூட்டம் நாளை 30.04.2025 ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் பொறுப்பு தனலட்சுமி முன்னிலையில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறு மேயர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் 2025-2026ம் நிதியாண்டிற்கான வரி செலுத்துவதில் 5 சதவீதம் ஊக்கத்தொகைபெற நாளை ஏப்.30ம் தேதி கடைசி நாளாகும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தப்படி, சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற நாளை கடைசி நாளாகும். எனவே, மாநகராட்சியின் அனைத்து வசூல் மையங்கள் இன்றும், நாளைக்கும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட காவல் நிலைய எண்கள். ஈரோடு நகரம்-04242-217100, கொடுமுடி-04204-222358, மொடகுருச்சி-0424-2500225, பெருந்துறை-04294-220548, அந்தியூர்-04256-260250, பவானி-04256-230243, கோபிசெட்டிப்பாளையம்-04285-222041, நம்பியூர்-04285-267229, சத்தியமங்கலம்-04295-220228, தாளவாடி-04295-245228. உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை சார்ந்த கோரிக்கை மற்றும் புகாரை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநில வாலிபர் ஒருவர் பானி பூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சென்ற பிறகு நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது. இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். ஈரோட்டில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
தொழிலாளர் தினமான மே மாதம் 1-ம் தேதி, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மே 1-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
▶️ஈரோடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0424-2266266. ▶️ மாவட்ட வருவாய் அலுவலர் 0424-2266333. ▶️மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 0424-2260999. ▶️ சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0424-2260455. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0424-2252052. ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0424-2275860. ▶️மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் 0424-2223157.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 104 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள <
Sorry, no posts matched your criteria.