India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 29,344 வாக்குகள் பெற்று 12,786 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 16,558 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். தமாகா வேட்பாளர் 4,473 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 4103 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக 14,611 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 12786 ஓட்டுகளும், தமாகா 2400 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 1589 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
ஈரோடு மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 4,492 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் சிவகுமார் 2,962 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கார்மேகம் 327 வாக்குகளும், தமாகா வேட்பாளர் விஜயகுமார் 447 வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மொத்தம் 70.59 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக வேட்பாளர் பிரகாஷ், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், தமாகா வேட்பாளர் விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ) உள்ளது. இந்த பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக ஜூன்.7ஆம் வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244, 9499055703 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் ஈரோடு தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 2,10,618 (19.83%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் பிரகாஷூம், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமாரும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தங்களின் புகைப்படங்களை பதிவிட வேண்டாம். பார்டைம் ஜாப் என்று சமூக வளைதளங்களில் வரும் லிங்க்குகள், தங்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று வரும் போலி லிங்க்கை தொட வேண்டாம். சமூக வளைதளங்களில் பணத்தை இழந்தால் உதவி எண் 1930 க்கு அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in வெப்சைட்டில் புகாரளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரம், ஜெனரேட்டா்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் லிட்டா் டீசல், ஒரு லட்சம் லிட்டா் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பெட்ரோல் பங்க் அமைத்தால் ஆண்டுக்கு ரூ.1 கோடி மிச்சமாகும். எனவே ஈரோடு மாநகராட்சி சாா்பில் சம்பத் நகா் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் (70.59%) வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் எண்ணும் பணி சித்தோடு – ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.