Erode

News June 10, 2024

ஈரோடு : 2 மாதத்திற்கு பின் குவிந்த மனுக்கள்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News June 10, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும். இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற பொதுமக்கள் குடிநீர் வசதி,முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு 215 மனுக்கள் கொடுத்தனர்.

News June 10, 2024

ஈரோடு: வளர்ச்சி திட்ட பணி குறித்த ஆலோசனை

image

ஈரோடு ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.

News June 10, 2024

ஈரோடு : மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

image

ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள ஈரோடு தெற்கு மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், சோலார், கணபதிபாளையம், அறச்சலுார் , எழுமாத்தூர், மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

News June 10, 2024

அந்தியூர்: வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

image

அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதில், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மக்களும் கலந்துகாெண்டனர். 

News June 10, 2024

மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கிய கலெக்டர்

image

ஈரோடு அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு 2024 -2025 கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சங்கரா கலந்துகொண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், முதன்மை கல்வி அலுவலர் சம்பத் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

ஈரோடு: கடும் போக்குவரத்து நெரிசல்

image

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. மேலும் இன்று முகூர்த்த நாள் என்பதால், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஈரோடு, கே.கே. நகர் ரயில் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதியடைந்தனர். 

News June 10, 2024

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய வங்கி கணக்கு

image

பவானி அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு புதிய வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய கணக்கு எண் வழங்கும் நிகழ்ச்சியை பவானி நகர்மன்ற தலைவர் சிந்துரி இளங்கோ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

News June 10, 2024

6 பேர் உயிரிழப்பு: தீவிர பரிசோதனை

image

தலமலை ஊராட்சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் கடந்த 16 நாள்களில் வாந்தி, பேதியால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை ஆகியோர் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து தண்ணீர் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

News June 10, 2024

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது

image

கோபி அருகே கொங்கர்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. விசாரணையில் சுமார் ரூ.19,200 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும், லாட்டரி விற்ற பணம் ரூ.13,000 ரொக்க தொகையையும் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!