Erode

News June 12, 2024

நாளை மின்தடை அறிவிப்பு

image

பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை( ஜீன்.13) நடைபெற உள்ளதால் ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பிகே புதூர் பணியம்பள்ளி ,  தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர்,  கவுண்டம்பாளையம், மாடுகட்டி பாளையம், எளையாம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 12, 2024

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோருக்கு விருது

image

ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்தவர்களுக்கு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விவரங்களை 20ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும், 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

ஈரோடு அந்தோனியார் தேவாலய தேரோட்டம்

image

ஈரோடு சூளையில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலய தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொது மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் .ஜாபர் அலி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் பெ.சா.சிறுத்தை வள்ளுவன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொருளாளர் இமானுவேல் கலந்து கொண்டனர்.

News June 12, 2024

ஈரோடு : 2 மாதத்தில் 1.90 லட்சம் பேர் வருகை

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறையால் ஏப்ரல் மாதத்தில் 73,000 பேரும், மே மாதத்தில் 1,17,000 பேரும் வருகை புரிந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 1.90 லட்சம் பேர் வருகையால் ரூ.9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News June 11, 2024

கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டய பயிற்சி

image

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை ஓராண்டு பயிற்சி நடப்பாண்டு தொடங்கப்பட உள்ளது. 17 வயது பூா்த்தி அடைந்தவா்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2998632 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட
வரும் 21ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இன்று தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

ஈரோடு அருகே மாரத்தான் போட்டி

image

கொடுமுடி தாலுகா சிவகிரி கொங்கு மஹாலில் வரும் 23ம் தேதி காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெறும் சிவகிரி மாரத்தான் போட்டி , 1 கி.மீ, 3கி.மீ, 5கி.மீ, 10கி.மீ, 15கி.மீ என 5-பிரிவுகளில் நடைபெறுகிறது. மொத்த பரிசுத்தொகை ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 15க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் 83449 41266, 97888 87888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News June 11, 2024

ஈரோடு: நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

image

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் சு. முத்துசாமி இன்று திண்டலில் உள்ள வெங்கடேஸ்வரா காப்பகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

கோபி: கட்டாயப்படுத்தி பாலியல் தொழில்

image

கோபி போலீசார் குள்ளம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கண்காணித்தபோது ஒரு வீட்டிலிருந்து ஆண் ஒருவர் தப்பி ஓடினார். வயதான சண்முகவடிவு என்பவரை விசாரித்ததில் 21வயது பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. சண்முகவடிவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News June 11, 2024

ஈரோடு : 2 மாதத்திற்கு பின் குவிந்த மனுக்கள்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!