India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பவானி கிளை சார்பில் பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் சுகந்தி தலைமை தாங்கினார். செயலாளர் பச்சாயி, அறிவுமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட இணைச் செயலாளர் கொடிமலர் சிறப்புரை ஆற்றினார். சத்துணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூறினர்.
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.ஜவகர் இ.கா.ப., கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
தாளவாடி அருகே திகனாரை கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் காட்டு யானைகள் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தையும் , டிரான்ஸ்பார்மர் கம்பத்தையும் உடைத்து சேதம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 213 கிராம சாலைகள் மேம்படுத்தும் பணிக்காக எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 181 சாலைகள் மேம்படுத்தும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. 32 சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 9 சாலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஜூன்.13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 15.06.2024 சனிக்கிழமை அன்று நண்பகல் 1.00 மணிக்கு கரும்புச் சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளதால் விவசாயிகள் கரும்புச் சர்க்கரையை 15.06.2024 முற்பகல் 11.00 மணிக்குள் கவுந்தப்பாடி விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்தியூர் பாலம் அருகே மண்பானை தொழிலாளர்கள், பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் வைக்க பயன்படும் மண்பாண்டங்கள் தயாரிக்கவும், கார்த்திகை மாதங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற விளக்கு தயாரிக்கவும் மண் எடுத்து தயாரிப்பதற்கு கடந்த காலங்களில் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் அறிக்கை தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 21 ஆம் தேதி, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய எண்ணை 86754 12356, 94990 55942 அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2024 – 25 ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0424 2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.