India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை மூலம், அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள புதிய வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள் TNDIPR, Govt. of Tamil Nadu என்ற வாட்ஸ்அப் சேனலில் இணைந்து அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர்
சுர்ஜித். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கார்த்திக் ராஜா, சுர்ஜித், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் பவானி காவிரி ஆற்றில் சேலம் – கோவை பைபாஸ் பாலத்திற்கு அடியில் காவிரி ஆற்றின் மேற்புற கரை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுர்ஜித் திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மொடக்குறிச்சி,ஈரோடு, பவானி, நம்பியூர் மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் நடப்பாண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கி தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானியை சேர்ந்த சேது மணிகண்டன் என்ற இளைஞர் தனது முன்னாள் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற முயன்றுள்ளார். போன் செய்தும் அப்பெண் எடுக்காததால், அவரது 2வது காதலனிடம் அதனைக் கூறி, அவனது செல்போனிலிருந்து பேச வேண்டும் என அவர். கூறியுள்ளார். இந்நிலையில், முன்னாள் காதலியின் 2வது காதலன் சேதுமணிகண்டனை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை அமைந்துள்ளது ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஈரோடு மாவட்டம் திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வரும் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் அந்தந்த வட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா இன்று தெரிவித்துள்ளார்.
கோவை அஞ்சல் மண்டலத்தின் ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு கூட்டம் ஜூலை 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்கள், மனுக்களை தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் 20 ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.கோபாலன் தெரிவித்துள்ளார்.
அந்தியூர் புதுக்காடு டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் ஆறுமுகம் (44) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 5 மணிக்கு புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைய பாரதி (40) மது அருந்தியுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பீரை ஆறுமுகத்தை குடிக்கச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. குடிக்க மறுத்த ஆறுமுகத்தை பீர் பாட்டிலால் மண்டையை உடைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை என்னும் இடத்தில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் வெங்கடாசலம் (25) என்பவர் வழக்கம்போல தோட்டத்தில் பூசணிக்காய் பாதுகாப்பிற்காக படுத்து உறங்கினார். இந்நிலையில், அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென வந்த ஒற்றை யானை அவரை தாக்கி மிதித்ததில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Sorry, no posts matched your criteria.