Erode

News June 20, 2024

ஈரோடு மாநகர் சுற்றுவட்டாரத்தில் மழை

image

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 3 மணியளவில் வழக்கத்தை விட காற்று வேகமாக வீசியது. தொடர்ந்து, 3:30 மணி முதல் ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் தூரல் மழை பெய்தது. இதனால் ஈரோடு மாநகர் சுற்றுவட்டாரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

News June 20, 2024

ஈரோடு: போலி ஆதார் கார்டு – 9 பேர் கைது

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து சட்டவிரோதமாக 10 ஆண்டுகள் தங்கியிருந்தது அம்பலமானது. அனருல் இஸ்லாம், ஹலால், சாகினூர், மோனூர் காஜி, ஆயுப் சல்மான்ஷா, மொனிரா, மகமுதா, மிஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

News June 20, 2024

ஈரோடு: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜூன் 21), தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்ட இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு தொடர்பான தகவலுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய எண்ணை 86754 12356, 94990 55942 அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

அந்தியூர்: தனியார் பேருந்துகள் மோதி விபத்து

image

பவானி லட்சுமி நகரில் ஈரோடு சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டு முந்தி சென்றதில் 2 பேருந்துகளும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். அதனால்,  அங்கு சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி, ஒட்டுநர்களை கண்டித்தனர். 

News June 19, 2024

ஈரோடு: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

ஈரோடு, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஜூன் 26ம் தேதி பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களுக்கு கோட்ட அளவிலா விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் தலைமை வகிக்கிறார். இதில் விவசாய நிலங்களை நில அளவீடு செய்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான கோரிக்கை மனு அளித்து தீர்வு பெறலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு உதவித்தொகை

image

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவகி என்பவர், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பேராத்ரோபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். எனவே அவருக்கு அறம் அறக்கட்டளை சார்பாக, போட்டியில் பங்கேற்கும் செலவினத் தொகையில் ஒரு பங்காக ரூ.10,000/ மொடக்குறிச்சி பா.ஜ.க., எம்.எல்.ஏ., சரஸ்வதி வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News June 19, 2024

பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு மாவட்டம் சிவகிரி தேர்வு நிலை பேரூராட்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

News June 19, 2024

இந்திய விமானப்படையில் ஆட்கள் சேர்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு ஜூலை 8 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

image

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் இன்று (ஜூன்.19) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் கொடுமுடி வட்டத்தில் 2 நாட்கள் மாவட்ட ஆட்சியர் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் இன்று மாலை கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

மின் வேலியில் சிக்கி யானை பலி

image

கோபி வட்டம், பெருமுகை கிராமத்தில் சஞ்சீவீராயன் குளம் உள்ளது. இக்குளத்திற்கு வடக்கே ஒரு தோட்டத்தில் முறைகேடாக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் இன்று (ஜீன்.18) காலை 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!