India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கி மற்றும் அவுட் காய் வைத்திருந்ததாக சத்தி, புதுக்குய்யனூர், டேங் வீதியைச் சேர்ந்த துரை (எ) சின்னதுரை (25) என்பவரை பவானிசாகர் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து 8 அவுட் காய், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் முன்னிலை வகித்தார். இதில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாஜலம் சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்துதுறை மானிய கோரிக்கையில், “அந்தியூர் பகுதிக்கு பகுதிநேர மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும். மலைக்கிராம மக்களுக்கு மினி பேருந்து இயக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
ஈரோடு, சென்னிமலை பேரூராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னிமலை அருகே அம்மாபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து வரும் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சென்னிமலை பேருராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஜூன் 23 ஆம் தேதி ஈரோடு, சேலம், தருமபுரி உட்பட 6 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பவானி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் கோரி விண்ணப்பத்த நிலையில், 9 பேரை இடமாற்றம் செய்து ஈரோடு எஸ்.பி. உத்தரவிட்டார்.
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டி பணி நடைபெற்று வருகிறது. இந்நிலைியில், அம்மன் நகர், சருகு மாரியம்மன் கோவில், காந்திநகர் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. மழைநீர் ஒதுங்க ஓடை கால்வாய் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில், தற்காலிக அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப பணியாளர் மற்றும் வழக்கு பணியாளர் என 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் உள்ள நபர்கள் <
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விஷச்சாராயம் அருந்தியதில் 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குறித்த புகார் அளிக்க, 10581 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தர “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் அமைத்து தரப்படவுள்ளன. பட்டா வைத்திருப்பவர்கள் ரூ.3.50 லட்சம் செலவில் வீடுகள் கட்டிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.