India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காசநோய் ஒரு உயிர் கொல்லி நோய். இது காற்றின் மூலம் பரவும் சமுதாய வியாதியாகும்.இதில், ஈரோடு மாவட்டத்தில் காசநோய் கண்டறியப்பட்ட 2,911 நோயாளிகள் சிகிச்சைக்கு பதிவு செய்யப்பட்டனா். 2, 532 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மார்ச் 26) காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது94990 55943, 0424-2275860 என்ற எண்களை தொடர்பு கொண்டு கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். 4-15 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.2.25, 16-60 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.3.50 செலுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு தினமும் காலை 6 மணிக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லாத ரயில் (56108) மார்ச்.25, 29, 30 ஆகிய நாட்களில் திருப்பத்தூர் வரை இயக்கப்படும். இதேபோல் ஜோலார்பேட்டை – ஈரோடு ரயில் (56107) அதே நாட்களில் திருப்பத்தூரில் இருந்து புறப்படும் என்றும், திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் மார்ச்.28ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களையோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார். (Share பண்ணுங்க)
ஈரோடு, விஜயமங்கலம், கைக்கோளன்பாளையத்தில், கனகரத்தினம் என்பவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் பலர் பணம் முதலீடு செய்துள்ள நிலையில், முதிர்வடைந்தும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பத்தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே ரூ.2 கோடி வரை மோசடி செய்த, ஏலச்சீட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் புகாரளித்தனர்.
ஈரோடு மாவட்ட ஆதியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (24.03.2025) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்பெற்று, குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் உடனிருந்தனர்.
ஈரோடு: நசியனூர் அருகே சேலத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் கடந்த 19ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, போலீசார் விரைந்து 4 கொலையாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 20ஆம் தேதி முக்கிய குற்றவாளிகள் இருவர் சரணடைந்துள்ள நிலையில் தற்போது கோகுல சுகவேஸ்வரன் என்பவர் ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
Sorry, no posts matched your criteria.