India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக மாட்டுச்சந்தை, குதிரை சந்தையுடன் தேர் திருவிழா நடைபெறும். நடப்பு ஆண்டு ஆடி பெருந்தேர் திருவிழா, வரும் ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பொது சேவை, கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளில் சாதனை மற்றும் சேவை புரிந்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 30ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பெருந்துறை இந்திராநகர் காலனியை சேர்ந்த கருப்புசாமி -தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில், தமிழ்ச்செல்வன் கருப்புசாமியை கத்தியால் மார்பு, தலையில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கருப்புசாமி சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மொடக்குறிச்சியை அடுத்த சின்னம்மாபுரத்தில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சராக பதவி வகித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் தோட்டத்து வீடு உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன் 24) காலை பணிக்கு வந்த தோட்ட வேலையாட்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளித்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
ஈரோடு எஸ்.கே.சி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான வங்கி கணக்கு தொடங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் எஸ்பிஐ, ஜிஎச் வங்கி கிளையின் மேலாளர் புவனேஸ்வரி பங்கேற்று வங்கி கணக்கு தொடங்குவதற்கான படிவங்களை வழங்கினார். இந்த முகாமில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்துள்ளதாக தலைமை ஆசிரியர் சுமதி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேர்வராயன் பாளையம் உள்ள நீர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் சாயக் கழிவுநீர், நேரடியாக சென்று பவானி ஆற்றில் கலந்து வருவதால் நீர் மாசுபடுகிறது. இதனால், பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர். பவானி ஆற்றில் நேரடியாக கலக்கும் சாயக்கழிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இன்று 3வது நாளாக ஜமாபந்தி ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அதிகாரி ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில், பர்கூர் உள் வட்டத்திற்குட்பட்ட 33 மலை கிராம மக்கள் மற்றும் அத்தாணி, கீழ்வாணி, மூங்கில் பட்டி, நகலூர், கூத்தம்பூண்டி கிராம பகுதி மக்கள் கலந்து கொண்டு வீட்டு பட்டா மாறுதல் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட பகுதிகளில் மனித உயிரை கொல்லும் கஞ்சா, சாராயம், ஸ்பிரிட் மற்றும் அந்நிய மதுபானங்கள் விற்பனை நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கட்டுப்பாட்டு வாட்ஸ்அப்
94429-00373 எண்ணிலும் தெரிவிக்கலாம். தகவல் தருபவர் பற்றிய ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.