Erode

News June 30, 2024

ஈரோட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

image

தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புத் தகர் என்ற இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு அசோக்நகர் பகுதியில் உள்ள சர்புதீன் என்பவர் வீடு மற்றும் எஸ்.கே.சி சாலை அருகே முகமது ஈசாக் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News June 28, 2024

ஜூன்.30 இல் கிராம சபை கூட்டம்

image

தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை 4 இல் இருந்து 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் கிராம ஊராட்சிகளில் வருகின்ற ஜூன்.30 இல் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில், தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

News June 27, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (ஜூன்.28) ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை தாலுகா விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கி தங்கள் பகுதி குறைகள் குறித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 27, 2024

வேளாண் குறைதீர் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

image

வேளாண் குறைதீர் கூட்டம் நாளை (28) காலை 10:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் காலை 10:00 முதல் 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

ஈரோடு: அமைச்சரிடம் மனு அளித்த எம்எல்ஏ

image

அந்தியூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மற்ற துறை அமைச்சர்களையும் நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கினார். மேலும், அந்தியூர் தொகுதிக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட வலியுறுத்தினார்.

News June 26, 2024

ஈரோடு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/VTRWijWVcgNBn57w5 என்ற லிங்கில் பதிவு செய்து, ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு, ஜூலை 2ம் தேதி நேரில் வர வேண்டும் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

image

சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் கீழ் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. தையல் பயிற்சி பெற்றவர்கள் சான்றுடன் இ-சேவை மைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் (அ) மகளிர் ஊர் நல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

image

சித்தோடு அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் நாளை (ஜூன் 27) மாவட்ட அளவிலான பி.எப். விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் (நிதி ஆப்கே நிகட்) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சந்தாதாரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல ஆணையாளர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

image

சித்தோடு அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் (ஜூன்.27) மாவட்ட அளவிலான பி.எப். விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் (நிதி ஆப்கே நிகட்) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சந்தாதாரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல ஆணையாளர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

ஈரோடு எம்.பி. பிரகாஷ் பதவியேற்பு

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரகாஷ், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

error: Content is protected !!