Erode

News July 7, 2024

தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் ஆய்வு

image

தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தலைவர் வெங்கடேசன் நேற்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மரப்பாலம், ஜீவானந்தம் சாலையில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று கோரிக்கையினை கேட்டறிந்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அளித்த மனுக்களை பெற்று கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

News July 6, 2024

ஈரோடு: புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்

image

ஈரோடு மாவட்ட பகுதிகளில் மனித உயிரை கொல்லும் கஞ்சா, சாராயம், ஸ்பிரிட் மற்றும் அந்நிய மதுபானங்கள் விற்பனை நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கட்டுப்பாட்டு வாட்ஸ்அப் (94429-00373) எண்ணிலும் தெரிவிக்கலாம். தகவல் தருவோர் பற்றிய ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 5, 2024

பிற்படுத்தப்பட்டோருக்கு சிறுதொழில் கடன்: ஆட்சியர் தகவல்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன் மற்றும் குழு கடன் ரூ.15 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

ஈரோட்டில் புத்தக திருவிழா

image

ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில், ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்டு 2 முதல் 13 வரை நடைபெற உள்ளது. இவ்விழா ஈரோடு – சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நூற்றுக்கணக்கான அரங்குகளுடன், பல சிறப்பம்சங்கள் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ஆம் ஆண்டு விழா மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் 20 ஆம் ஆண்டு விழா மிக சிறப்பாக நடத்தப்பட உள்ளது என அறிவக்கப்பட்டுள்ளது.

News July 4, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 4, 2024

இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி – ஆட்சியர்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக மண் மற்றும் வண்டல் மண்ணை எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் இணைய வழியில் அனுமதி வழங்குவார்கள் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

தேசிய நீச்சல் போட்டி ஈரோடு மாணவி தேர்வு

image

மாநில அளவிலான வாட்டர் போலோ நீச்சல் போட்டி, சென்னை வேளச்சேரியில் நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய, 13 வீராங்கனையர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஈரோடு கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அல்பியாகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கும் தேசிய வாட்டர் போலோ போட்டியில் தமிழக அணி பங்கேற்கவுள்ளது.

News July 2, 2024

தேவாலயங்களை பழுதுபார்க்க நிதி உதவி

image

ஈரோடு மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

ஈரோடு: 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை

image

ஈரோடு மாவட்டத்தில் 24-25ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளோர் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் ஜூலை 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9443941443, 9842759545 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 30, 2024

ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு!

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!