India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு கூடங்களில் தேர்வு பணியில் தனிப்படைகள், கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் , நாளை (ஜூலை 13) பொது விநியோக திட்ட குறைதீர்நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் ஆதாரில் செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் கலந்து கொண்டு பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவித்தொகை பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற இளங்கலை மருத்துவ மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழாவானது இன்று(ஜூலை 12) கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை 12) காலை 7 மணி அளவில் தூரல் மழை பெய்தது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் 10 நிமிடம் தூரல் மழை பெய்தது. மேலும் நம்பியூர், கோபி, பவானி, அந்தியூர், தாளவாடி சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று இரவு வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, காசிபாளையம் அரசு ஐடிஐ வளாகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐடிஐகளில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கும் பொருட்டு, பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் ஜூலை 15ஆம் தேதி நடக்க உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என ஈரோடு அரசு ஐடிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 2024-25 ஆண்டு முதல் போக பாசனத்திற்கு அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 54 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் ஜூலை 12ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.
வெள்ளோட்டில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.