India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் எலவமலை பஞ்சாயத்துக்குட்பட்ட விருமாண்டபாளையத்தில் இன்று வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி, குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். இதில் எம்பி அந்தியூர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உட்பட பலர் பங்கேற்றனர்.
காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட திமு கழகத்தின் சார்பாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர். ராஜ்யசபா எம்பி அந்தியூர் ப.செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இன்று (ஜூலை 15) முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் இணையவழியில் மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் இணைய வழியில் விண்ணப்பிக்க தவறியவர்கள் இன்று முதல் கல்லூரியில் சான்றிதழ்களை சமர்ப்பித்து, முதலாமாண்டு படிப்பில் சேரலாம் என கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அடுத்த திண்டல் அருகே உள்ள சக்தி நகரில் அகில இந்திய ஆடவர் மற்றும் மகளிருக்கான கைப்பந்து விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இறுதி போட்டியில் கேரளா மகளிர் அணி முதலிடத்தை தட்டி சென்றது. பரிசினை ஈரோடு முதன்மை ஆய்வாளர் ஜி.ஜவகர் வீராங்கனைகளிடம் வழங்கினார். ஆடவருக்கான போட்டிகள் நிறைவடையவில்லை.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஈங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சைலேந்திர குமார். இவரது மனைவியான கார்கில் குமாரிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது கணவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஏற்றிக்கொண்டு பெருந்துறையில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நாளை (ஜூலை 15) முதல், 5 பாட பிரிவுகளுக்கு (பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல்) நேரடியாக நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து விண்ணப்பம் பெற்று முதலாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் ப.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் ஈரோடு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களில் அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினரோடு இணைந்து செயலாற்றுவது குறித்து பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. இந்நிலையில், பெருந்துறை தீயணைப்பு துறையினர் அப்பகுதி தன்னார்வலர்களுக்கு வெள்ளம், பெரும் தீ விபத்து, சாலை விபத்து, வனத்தீ உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் இன்று பவானி நகர செயலாளர் வழிகாட்டுதலின்படி திமுகவினர் கலந்துகொண்டு சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஈரோடு மாவட்டம் பவானி நகர திமுக சார்பில் பவானி அந்தியூர் பிரிவில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.