Erode

News July 17, 2024

ஈரோடு மாவட்டத்தில் வலம் வரும் ஆப்பிள் மேப் வாகனம்

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஆப்பிள் நிறுவனத்தினர் நவீன வரைபட அடையாளப்படுத்தும் (மேப் அப்டேட்) கருவியை காரில் பொருத்தி வீதி வீதியாக வலம் வருகிறது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி பெற்ற இந்த வாகனங்கள் ஈரோடு மாநகரம், பவானி, கோபி என்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 7 வாகனங்கள் வலம் வருகின்றது. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் – சென்னிமலை, வெள்ளோடு ஆகிய பகுதிகளில் வலம் வந்தது.

News July 17, 2024

ஈரோட்டில் அதிகாலையிலேயே தொடங்கிய மழை

image

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை 17) அதிகாலை முதலே தூரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் தற்போது தூரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அடுத்த 2 நாட்கள் வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 16, 2024

ஈரோடு மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

image

ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இருந்துவரும் லக்ஷ்மி பாவ்யா தன்னீரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) / திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியாக இருந்துவரும் நாரணவ்ரே மனிஷ் சங்கரராவ் ஐஏஎஸ் ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News July 16, 2024

அந்தியூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம்

image

ஈரோடு மாவட்டம், அந்தியூர் – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதனை அந்தியூர் தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம் இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

ஈரோட்டில் தனியார் துறையில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிகாட்டும் மையத்தில் ஜூலை 19ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா அறிவித்துள்ளார்.

News July 15, 2024

காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் உத்தரவு படி ஆயுதப் பயிற்சி மற்றும் அதனை கையாளும் முறை குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஈரோடு-ஆனைக்கல்பாளையத்தில் உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர், காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி குறித்த வகுப்பை மேற்கொண்டார்.

News July 15, 2024

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பவானி, கோபி உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர், சாலை, கழிவறை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News July 15, 2024

ஈரோடு: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூலை 19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

எல்லையில் டெங்கு பரவலை தடுக்க சோதனை

image

கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக கர்நாடக எல்லையான கர்கேகண்டி, அந்தியூர், வரட்டுபள்ளம் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன் தலைமையில் மருத்துவக் குழுவினர் தீவிர மருத்துவ சோதனைக்கு பிறகு தமிழகத்திற்குள் அனுப்புகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

error: Content is protected !!