India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் 219 ஆவது நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவ படத்துக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், அரச்சலூர் நல்லமங்கா பாளையத்தில் பொல்லானுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.82 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளராக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் பேரூராட்சியை சேர்ந்த கே. எஸ். கோதண்டன் நியமிக்கபட்டுள்ளார். தொடர்ந்து இவர் இனிமேல் அனைத்து தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் சார்பாக பங்கேற்பார் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக பல்வேறு நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் புதிய 15 பேருந்துகளை இன்று அமைச்சர்கள் முத்துச்சாமி மற்றும் சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்கள் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு – 9498172088, பவானி – 9025330446, கோபி – 9585376421, சத்தி – 9498178300, பெருந்துறை – 9498168355. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் எஸ்ஆர்எம் கோப்பைக் காண ஹாக்கி போட்டி எஸ்ஆர்எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 4/3 என்ற கணக்கில் வேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை வென்று கோப்பையை கைப்பற்றியது. புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த சபீனா போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு<
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் உயிருடன் உள்ளதை உறுதிப்படுத்த வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் பகுதி விஏஓவிடம் உரிய சான்று பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.