India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று (ஜூலை 19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அருகே சித்தோட்டில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியன் வில், ரிகர்வு வில், காம்பவுண்ட் வில் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு ஈரோடு எம்பி பிரகாஷ், அரசு வக்கீல் திருமலை ஆகியோர் சான்றிதழ், பதக்கங்களை வழங்கினர்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாகவுள்ளது. பல்வேறு நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
அரசின் சேவைகள் விரைவாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் நாளை (19.07.2024) ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 19,533 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், தற்போது அணைக்கு வினாடிக்கு 16,612 அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 78.28 அடியாக உள்ளது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும்
@dreamzonecbe இணைந்து நடத்தும் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது. இதில் 107 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேவர் மலையிலிருந்து தாமரை கரை செல்லும் சாலையில் நேற்று சுற்றித் திரிந்தது. அவ்வழியே சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர். தகவலின்பேரில் விரைந்துவந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டிவிட்டு செல்பி எடுத்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் 219வது நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், அரச்சலூர் நல்லமங்காபாளையத்தில் பொல்லானுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.82 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.