India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை இன்று சந்தித்தார்.அச்சந்திப்பில் , ஈரோட்டில் இருந்து தினசரி இரவு புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் வண்டி புறப்படும் நேரம் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இரவு 9 மணிக்கு பதிலாக 10 மணிக்கு புறப்படும் வகையில் இயக்கினால் சென்னை சென்ட்ரல் சென்றடையும் நேரம் பயணிகளுக்கு வசதியாக அமையும் என்பதை தெரிவித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை (சிவில் சப்ளை சிஐடி) டிஎஸ்பியாக இருந்துவரும் சுரேஷ் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மணிமங்கலம் சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக இருந்துவரும் ராஜபாண்டியனை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். இவர் ஈரோடு சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாக விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.
நாளை இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கோவில் சொத்துகளை பாதுகாக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் மேலப்பாளையத்தில் நாளை காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி அறிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத்திருவிழா, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் இன்று ( ஜூலை20) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. இதில் பாரம்பரிய விதைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த உணவுத் திருவிழாவை காண ஏராளமானோர் வருகைதர உள்ளனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் இன்று(ஜூலை 19) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வங்கியாளர்கள் கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கி அளவில் மேலாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் துறை சார்ந்த அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
தமிழ்நாட்டில் நடப்பாண்டு மாநில அரசு சார்பில், நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை பள்ளியில் 5 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் 5 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிக்கு 1 ஆசிரியர் என 11 நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. எமிஸ் தளத்தில் ஆசிரியர்கள் ஜூலை 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தாலுகாவில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வண்ணாங்காட்டு வலசு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று காலை ஆய்வு செய்தார். பின் ஈரோடு மாநகராட்சி தெருக்களில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இன்று காலை சத்தி உட்கோட்ட காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பங்களாபுதூர், புளியம்பட்டி, தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்ளிட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்பட 44 நபர்களுக்கு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 9 மணி அளவில் ஆறு ஆய்வாளர்கள் மற்றும் 38 உதவி ஆய்வாளர்களுக்கு கையாளும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சாலையோர மரத்தின் மீது பைக் மோதி இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலர் குமார் (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.