India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி துணைமின் நிலையத்தில் நாளை (ஜூலை 25) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே கொடுமுடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரோஜா நகர், எஸ்.என்.பி.நகர், காங்கேயம் ரோடு, எம்.ஜி.ஆர்.நகர், ஆச்சியம்மன் கோவில் பகுதி மற்றும் எமகண்டனூர் ஆகிய
பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் கடுகு, எள், சூரியகாந்தி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையும், குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதலும் செய்யப்படும் என்பது சிறந்தது. டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கீடு அறிவிப்பை வரவேற்கலாம். இயற்கை விவசாயத்துக்கு, 1 கோடி பேருக்கு பயிற்சி செயல்முறைப்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், மதி சிறகுகள் தொழில் மையத்தில், ஒரு ஒப்பந்த நிறுவன மேம்பாட்டு அலுவலர் ரூ.25,000 ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளார். விருப்பமுள்ளவர்கள் சுய விவரத்தை erd.tnrtp@yahoo.com என்ற மின்னஞ்சல் (அ) மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 5 பாரதிதாசன் தெரு, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு என்ற முகவரியில் ஜூலை 25க்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இலவச கம்பியூட்டர் டெலி பயிற்சி வகுப்பு (ஆண்/பெண்) வரும் ஆகஸ்டு 1 முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 87783-23213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நடப்பு ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே 17 வயது பூர்த்தி அடைந்த பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ஆம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்தவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் www.tncuicm.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற, கூட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை அடங்கிய மனுக்களை ஆட்சியர் பெற்று கொண்டார். இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையி்ல ஈரோட்டில் மத்திய மஞ்சள் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்பது ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட வேண்டும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் அறிவிப்பு வெளியாகும் என ஈரோடு மக்கள் எதிர்பார்த்துள்ளனர். பட்ஜெட் குறித்து உங்கள் கருத்து என்ன?
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் ஜூலை 26 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்ச்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வுசெய்து வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.25,000, சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை <
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
Sorry, no posts matched your criteria.