India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு, அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அம்மாபேட்டை பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள (ம) தாழ்வான பகுதியில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளதால், அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை மீட்டனர். பின்னர், ஷகிலா (40), திருப்பூரை சேர்ந்த லலிதா (38) திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜன் ஆகியோரை கைது செய்தனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நேற்றிரவு காரில் சென்றனர். அப்போது, சோதனை சாவடி சோதனைச் சாவடி 9 மணிக்கே மூடப்படும் என்பதால் அதிவேகத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில், தக்காளி ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தின் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 2 மாணவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு, சித்தோடு அடுத்துள்ள அரசு போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடிநீர் தொட்டியினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி ஆகிய இரு இடங்களில், மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு ஓராண்டு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி மதுவிலக்கு பிரிவில் பணியாற்ற, பிற போலீசாரிடம் விருப்ப மனு பெறப்பட்டு பணியிடம் மாற்றப்படும். இந்நிலையில் மதுவிலக்கு போலீசார் 32 பேரை பணி இடமாற்றம் செய்தும், புதிதாக 39 பேரை நியமித்தும் ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற 2 ஓடைகள் சேர்ந்தது ஈரோடை. இதுவே காலப்போக்கில் மருவி ‘ஈரோடு’ என்றானதாக கூறப்படுகிறது. ‘பிரம்மதோசத்தின்’ காரணமாக இந்தியா வந்த சிவன் ஈரோடு கபால தீர்த்தத்தில் நீராடியபோது மண்டை ஓடை சிதைந்ததாகவும், அவை விழுந்த இடங்களே வேள்ளோடு(வெள்ளை மண்டை), பேரோடு(பெரிய மண்டை), சித்தோடு(சிறிய மண்டை) என்றானதாக கூறப்படுகிறது. இதே போல் ஈரோட்டை பற்றி நீங்கள் அறிந்தவை என்ன?
ஈரோடு சத்தி பேரூந்து நிலையம் முன்பு மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மாதாந்திர மின் கணக்கீட்டை அமுல்படுத்த வேண்டும், மின்வாரியத்தில் ஏற்பட்ட ஊழலுக்கு யார் யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (25.7.24) மாலை கட்சியின் நகரச் செயலாளர் வாசுதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.47 அடியாக அதிகரித்து உள்ளது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.80 அடியாக உள்ளது. 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை.25) பிற்பகல் முதல் மழை பெய்தது. அதன்படி, ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல், பவானி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் பிற்பகல் தூரம் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் உருவானது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வரும் 27-7-2024 தேதி அன்று ஈரோடு மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 96988-07143 என்ற எண்ணை அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.