India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு அரசு தந்தை பெரியார் கூடுதல் மருத்துவமனை தலைமை மருத்துவமனையில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி தாய்ப்பால் வங்கி அறையை திறந்து வைத்தார். உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் வி.செல்வராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
தமிழக அரசும், மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ‘ஈரோடு புத்தகத் திருவிழா – 2024’ நாளை மறுநாள் (ஆக.02) ஈரோட்டில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சு.முத்துசாமி, பொது நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத் கலெக்டர் ராஜகோபால் சுன்காரா, எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த விழா ஆக.13 வரை நடைபெறவுள்ளது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2Newsஇல், ஈரோடு மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9160322122, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
சென்னிமலை யூனியன், வெள்ளோட்டை அடுத்த திருமலைசாமி காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது இளைய மகன் சுகேஷ் (20). இவர் இன்று காலை 8 மணி அளவில் பைக்கில் சென்னிமலை வந்துவிட்டு திரும்பி வெள்ளோட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அசோகபுரம் என்ற இடத்தில் அதிவேகமாகச் சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிழல் குடையில் மோதியதில் சுகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்துபோலீசார் விசாரிக்கின்றனர்.
தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்திற்கும் மேல் கனஅடி நீர் வெளியேறிவருகிறது. விரைவில் 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றும், எனவே ஈரோடு மாவட்டத்தில் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஆட்சியருக்கு மேட்டூர் செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் பவானியில் கரையோர பகுதியினர், புது பஸ் ஸ்டாண்ட்டை அடுத்த கந்தன் நகர், அந்தியூர் பிரிவு பகுதியினர், பசுவேஸ்வரர் மீனவர்கள், நெருஞ்சிப்பேட்டை மக்கள் மேடான பகுதிகளுக்கு சென்றனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஆண்டுதோறும் ஆடி 18ம் தேதி மட்டும் மக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக 2020 முதல் 2022 வரை 3 ஆண்டுகள் பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டும் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி, காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்ட காவிரி கரையோரம் உள்ள அந்தியூர், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் அத்தியாவசியத்தை தவிர்த்து விடுமுறை எடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு: அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (31ம் தேதி) காலை 11 மணிக்கு முதல் வன பூஜை நடைபெறவுள்ளது. இதில், புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து குருநாதசாமி, பெருமாள்சாமி, காமாட்சியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் புறப்பட்டு வன கோயிலுக்கு தேர் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். அன்று இரவு வனபூஜை நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். இதில் ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் , தூய்மை பாரத இயக்கம் உட்பட பல்வேறு திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.