India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஈரோடு சோலார் ரவுண்டனா பகுதியில் இன்று புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில் அமைச்சர் முத்துசாமி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்கும், திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஈரோடு வருகை தந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலபதி எம்எல்ஏ வரவேற்று அவருக்கு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இருந்தனர்.
அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவுநாள் நாளை அரசு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி பாதுகாப்பிற்கு 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக கோவை மாவட்டத்திலிருந்து 210 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இவர்கள் தீரன் சின்னமலை நிகழ்ச்சி பாதுகாப்பு பணி, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், நாளை (ஆகஸ்ட் 3) 108 ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்குத் தகுதியான நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28888060 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் கவின் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
ஈரோடு மாவட்டம் ஈரோடு வனக்கோட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் ஆசனூர் ஆகிய பகுதிகளில் ஜப்பான் குழுவினருடன் வனத்துறையினர் நேற்று காலநிலை மாற்றம் பற்றி ஆய்வு மேற்கொண்டனர் அவற்றில் மரங்களை வளர்ப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அவற்றை நகர்ப்புற பகுதியில் எவ்வாறு நடவு செய்து பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஈரோடு வன கோட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று (ஆகஸ்டு 1) நடைபெற்றது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் இ.கா.ப., தலைமை வகித்தார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாதாந்திர குற்றத்தடுப்பு காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.
➤ஈரோட்டில் இருந்து ஆக.3ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். ➤பவானிசாகர் அணையை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ➤வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஈரோட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். ➤ஈரோட்டில் நாளை(2.8.24) புத்தகத் திருவிழா தொடங்குகிறது. ➤பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. (ஷேர் பண்ணுங்க)
ஈரோடு அடுத்த ஆனைக்கல்பாளையத்தில், மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானம் உள்ளது. அதில், இன்று (ஆகஸ்டு.1) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர், போலீசாரின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்வையிட்டு மாதாந்திர ஆய்வினை மேற்கொண்டார். அப்போது அவர் வாகனங்களின் தற்போதைய நிலை, அவற்றின் பராமரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
காவிரியில் 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 59 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இலுப்பை தோப்பு, சத்திரப்பட்டி, வடக்கு தெரு ஆகிய இடங்களில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். கரையோர பகுதிகளில் வருவாய்த்துறை, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டையே உலுக்கும் வயநாடு நிலச்சரிவில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் புட்டு சித்தம்மாவின் உடல் தாளவாடிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. தந்தை ரங்கசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக வயநாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வளர்ப்பு மகன் மகேஷின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
Sorry, no posts matched your criteria.