Erode

News August 3, 2024

தேமுதிக சார்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை 

image

தேமுதிக ஈரோடு மாநகர மாவட்டம் கொங்கு மண்டல
தளபதி எஸ்.ஆனந்த் தலைமையில், தீரன் சின்னமலை சிலைக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் சஞ்சய் குமார், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தன், தமிழ் செல்வன்
தொழிற்சங்க பொருளாளர் புரட்சி தீபம் லோகு, இளைஞரணி செயலாளர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 3, 2024

அரச்சலூரில் அமைச்சர், கலெக்டர் தீரன் சின்னமலைக்கு மரியாதை

image

அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் முத்துசாமி, ஈரோடு எம்பி பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, கொமதேக கட்சி நிறுவனர் ஈஸ்வரன், எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

News August 3, 2024

ஈரோட்டில் 31 பேருக்கு பணி நியமன ஆணை

image

ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

News August 3, 2024

ஈரோட்டில் உள்ளூர் விடுமுறை

image

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினைத்தையொட்டி இன்று (ஆக.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

News August 3, 2024

31 பேருக்கு பணி நியமன ஆணை

image

ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

News August 2, 2024

பக்தர்கள் குளிக்க ஏற்பாடு

image

ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள காவிரி ஆற்றின் அருகில் உள்ள கோயில்களில் வெள்ள எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை (ஆக.3, 4) அன்று பக்தர்கள் திதி, தர்பணம் மற்றும் வழிபாடு செய்ய கோவில் கரை பகுதியில் குழாய் மூலம் காவிரி நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 2, 2024

ஈரோட்டில் இன்று புத்தகத் திருவிழா

image

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 12 நாட்கள் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் இலக்கிய நிகழ்ச்சியும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், அறிஞர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

News August 2, 2024

அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனடியாகவும், விரைவாகவும் சென்றடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

News August 2, 2024

ஈரோட்டில் அவசர உதவி எண் அறிவிப்பு

image

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி தண்ணீர் திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல்துறை வெள்ளப்பெருக்கு அவசர உதவி எண் 0424-2259100, 94981-81211 தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

விளையாட்டு உபகரணம் வழங்கும் விழா

image

ஈரோடு, ஆர்.என்.புதூரில் இன்று ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு உபகரணங்கள் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், எம்.பி பிரகாஷ், உட்பட பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!