India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶️ஈரோடு டவுன் காவல் நிலையம் 9498101220. ▶️மொடக்குறிச்சி காவல் நிலையம் 3438101242. ▶️பெருந்துறை காவல் நிலையம் 9498101244. ▶️கொடுமுடி காவல் நிலையம் 9498101240. ▶️பவானி காவல் நிலையம் 9498101213. ▶️அந்தியூர் காவல் நிலையம் 9498101218. ▶️கோபி காவல் நிலையம் 9498101232. ▶️நம்பியூர் காவல் நிலையம் 9498101243. ▶️சத்தி காவல் நிலையம் 9498101246. ▶️தாளவாடி காவல் நிலையம் 9498101249. இதை SHARE பண்ணுங்க.
ஈரோடு, அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம் பகுதி சேர்ந்தவர் பிரதிபா(19). இவர் சேலம், சங்ககிரியில் உள்ள மருந்தியல் கல்லூரியில், 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில், குமாரபாளையத்தில் உள்ள ஹோட்டலுக்கு செல்ல, அவரது தந்தை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரதிபா, விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சரிபார்க்கும் பணி நடைபெற்றதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (23.04.2025) பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. A.சுஜாதா, பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மும்மூர்த்திகளும் (சிவன், பிரம்மா, திருமால்) அருள்பாலிக்கும் ஒரே ஆலயம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. மேலும், பித்ரு தோஷம், நாக தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கவும், மன அமைதி பெறவும் இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் 210வது திருத்தலமாகத் திகழ்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
ஈரோடு, கவுந்தப்பாடி பெரிய புலியூரை சேர்ந்தவர் அய்யனார் (42). கூலி தொழிலாளியான இவருக்கு, குடிப்பழக்கம் இருந்ததால், பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த அய்யனார், வீட்டு சமையலறையில் நூல் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு ரூ.6,000, கோழிக்கு ரூ.200, மாட்டிற்கு ரூ.37,500 இழப்பீடு வழங்க அரசு அறிவித்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2024 செப்., முதல் கடந்த ஜன., வரை நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு ரூ.6,000 இழப்பீடு வழங்கும் பணி துவங்கியது. மக்களே, உங்களது கால்நடைகள் நாய் கடித்து இறந்தால், உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பதிவு செய்தால் தான் இழப்பீடு கிடைக்கும் (SHARE பண்ணுங்க)
ஈரோட்டில் உள்ள திண்டல் முருகன் கோயில் சோழர்களால் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் புகழப்படும் 108 முருகன் கோயில்களில் இதுவும் ஒன்று. வேலாயுதசாமி எனும் முருகன் மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தைப்பூசம், கந்த சஷ்டி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறும். மன அமைதி பெற பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசித்துவிட்டு செல்கின்றனர். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.