Erode

News August 21, 2024

ஈரோட்டில் 235 சவரன் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது

image

ஈரோட்டில் ஜூன் 8ம் தேதி ஆடிட்டர் சுப்பிரமணி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் 235 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் ஆடிட்டரின் கார் ஓட்டுநர் உள்பட 5 பேரை ஏற்கனவே கைதுசெய்த போலீசார் 132 சவரன் நகை, ரூ.45 லட்சத்தை பறிமுதல்செய்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான நரசிம்ம ரெட்டியை கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News August 21, 2024

ஈரோட்டில் இன்று மின்தடை

image

ஈரோட்டில் மின்பராமரிப்பு காரணமாக இன்று மின்தடை ஏற்படும். காலை 9 முதல் மாலை 5 மணிவரை: கங்காபுரம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், கொளத்துப்பாளையம், ஆட்டையம்பாளையம், புதுவலசு, கண்ணாமூச்சி, வெள்ளக்கரட்டூர், விராலிக்காட்டூர், குருவரெட்டியூர், குரும்பபாளையம். காலை 9 முதல் 2 மணிவரை: சிப்காட் வளாகம், வாவிக்கடை, கந்தம்பாளையம், வெள்ளியம்பாளையம், பெருந்துறை நகர், சென்னிமலை ரோடு, பவானி ரோடு.

News August 21, 2024

கீழ்பவானி வாய்க்காலில் கசிவு: சரிசெய்யும் பணி தீவிரம்

image

பெருந்துறை அருகே நல்லாம்பட்டி பகுதி கீழ்பவானி வாய்க்காலில், நேற்று முன்தினம் மாலை உடைப்பு ஏற்பட்டு நீர் கசிவு ஏற்பட்டது. அங்கு சென்ற நீர்வளத் துறை அதிகாரிகளால் நீர் கசிவை சரி செய்ய முடியவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று விரைந்து சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

News August 20, 2024

கோபி அருகே கல்குவாரி வெடி விபத்தில் சிக்கி இருவர் பலி

image

கோபி அருகே புஞ்சை துறையம் பாளையத்தில் ஸ்டார் புளு மெட்டல்ஸ் கல்குவாரியில் வேலை செய்து வந்த செந்தில்குமார், அஜீத்குமார் ஆகியோர் வெடிவிபத்தில் சிக்கி இன்று இறந்தனர். இதன் உரிமையாளர் பெருந்துறையை சேர்ந்த லோகநாதன் மனைவி ஈஸ்வரி. 2015முடிந்த உரிமத்தை புதுப்பிக்காமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News August 20, 2024

ஈரோடு அருகே விபத்து: 6 பேர் காயம்

image

அந்தியூர் சங்கரா பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கர்நாடகாவில் இருந்து அந்தியூர் நோக்கி வந்த லாரியும் அந்தியூரில் இருந்து மூலக்கடை நோக்கி சென்ற மினி ஆட்டோவும் மோதிக்கொண்டதில் மினி ஆட்டோவில் சென்ற இரண்டு ஆண்கள் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.  அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சை பெற்று 2 பேர் வீடு திரும்பிய நிலையில் 4 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

News August 20, 2024

ஈரோடு இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤பெத்தாம்பாளையம் பகுதியில் எல்பிபி வாய்க்காலில் நேற்று இரவு உடைப்பு அமைச்சர் ஆய்வு
➤சத்தியமங்கலத்தில் ஆகஸ்டு 22ஆம் தேதி உங்களை தேடி திட்ட முகாம் நடைபெற்றது.
➤ஈரோட்டில் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
➤கங்காபுரம் பகுதிகளில் நாளை மின் தடை
➤தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை
➤ஈரோடு மாவட்டத்தில் ஒண்டிவீரன் மற்றும் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News August 20, 2024

சத்தியமங்கலத்தில் உங்களை தேடி திட்ட முகாம்

image

ஈரோடு, சத்தியமங்கலம் தாலுக்காவில் நாளை (21.8.24) மற்றும் ஆகஸ்டு 22ஆம் தேதி உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஒரு நாள் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், நாளை மாலை பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு, கோரிக்கை மனுக்களை பெற உள்ளார் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

வாய்க்காலில் உடைப்பு: அமைச்சர் ஆய்வு

image

காஞ்சிக்கோயில் அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பகுதியில் எல்பிபி வாய்க்காலில் நேற்று இரவு உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணை நீர் திறப்பு சட்டர் மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சங்கரா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். போர்க்கால அடிப்படையில் சரி செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். 

News August 20, 2024

ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

சத்தியமங்கலம் தாலுகா அரசூர் அடுத்த குயவன்குழி பகுதியில் ஆகஸ்ட் 21ஆம் தேதி (புதன்கிழமை) மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை மனுக்களை, முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்து பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இந்த மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் ராஜ கோபால் சுன்காரா தலைமை வகிக்கிறார்.

News August 20, 2024

ஈரோட்டில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

ஈரோடு தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. ஈரோடு தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 98 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வானவர்கள் <>விவரங்கள்<<>>

error: Content is protected !!