India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர் செயல் வீரர்கள் கூட்டம் நாளை தொடங்க உள்ளது. இதில் சென்னிமலை வடக்கு ஒன்றியம், வெள்ளோடு – சதா மஹாலில் நாளை காலை 10 மணிக்கும், பெருந்துறை கிழக்கு ஒன்றியம், காஞ்சிகோவில் – தங்கம் மஹாலில் நாளை மலை 4 மணிக்கும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில், பாஜக உறுப்பினர் சேர்க்கை-2024 பயிலரங்கம், ஈரோடு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் தலைமை வகித்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை பற்றிய வழிகாட்டுதல்களை வழங்கினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் – பர்கூர் மலைப்பாதையில்
தட்டகரை அரசு பள்ளி அருகில் கர்கேகண்டி நோக்கி சென்ற சிமெண்ட் லாரியும், ராமாபுரம் பகுதியில் இருந்து தக்காளி ஏற்றி வந்த ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரி ஓட்டுநருக்கு தலை, கை காலில் காயம் ஏற்பட்டது. ஈச்சர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட ஓசூர், தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடிவருகிறது. நேற்று இரவு தாளவாடியில் இருந்து பிசில்வாடி செல்லும் சாலையில் சிறுத்தை சாலையை கடந்து சென்றுள்ளது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம்பிடித்தனர். சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவிலிருந்து வரத்து குறைந்ததால், ஈரோட்டில் சின்ன வெங்காயத்தைவிட பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகிறது.வழக்கமாக பெரிய வெங்காயத்தைவிட சின்ன வெங்காயம்தான் விலை அதிகமாக இருக்கும்.
புளியம்பட்டி நகராட்சியில் நேற்று இரவு முதல் தினசரி சந்தை நகராட்சி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது. இதனை கண்டித்து விவசாயிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் புளியம்பட்டி நகராட்சியை கண்டித்து கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். காலை முதல் நடந்த போராட்டம் ஆனது மாலை புளியம்பட்டி நகராட்சி மற்றும் பொதுமக்கள் உடன் முதலில் 50 பேருக்கு குலுக்கல் முறையில் கடைகள் வழங்கப்படும் என உத்தரவிட்டனர்.
➤ஈரோட்டில் இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம்
➤பெருந்துறையில் ஆகஸ்ட் 25யில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
➤ஈரோடு அகில்மேடு மெயின் வீதியில் பிரியாணி கடை தீ விபத்து
➤ராட்டைசுற்றிபாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவிலில் ஆகஸ்ட் 26ஆம் தேதி கருவறைக்குள் மக்களுக்கு அனுமதி.
➤கோபி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்
➤கொடுமுடி: வாய்க்காலில் குளித்த வாலிபர் பலி
ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையிலான ஊரக வளர்ச்சி துறையினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் இல்லாமல் காணப்பட்டது.
ஈரோட்டில் தொல்லியல் முக்கியதுவம் வாய்ந்த சடையப்பசாமி கோவிலின் மூலஸ்தானத்தை மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, ஆலயம் காப்போம் என்ற அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் 2 வாரத்தில் இந்து அறநிலையதுறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் சீரமைப்பு என்ற பெயரில் 200 ஆண்டுகள் பழமையான கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள சிலையை அகற்ற கூடாது, மூலஸ்தானத்தை சீரமைக்க கூடாது என்று மனுவில் இருந்தது.
ஈரோடு மாவட்டம் வேளாண்துறை சார்பாக இயற்கை விதைகள் விற்பனை மற்றும் கருத்தரங்கு ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஏ.ஈ.டி. பள்ளியில் வேளாண்துறை சார்பில் விவசாய இயந்திரங்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.