India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பர்கூர் அருகே ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த தாசன்-மனிஷா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் ஏழு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவக் குழுவினர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் தாசனுக்கு நவீன வாசக்டமி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து 108 வாகனம் மூலம் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மக்களே உங்கள் கருத்து?
பவானி அருகே சன்னியாசி பட்டி பகுதியில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்பொழுது விவசாயி நல்லகண்ணுவின் மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் மீது மின்கம்பம் அருந்து விழுந்தது. அவற்றில் மாட்டு இரண்டு மாடுகள் இரண்டு எருமைகள் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் செக்போஸ்ட்க்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. பூதாலபுரம் அருகே விஎம் தொட்டி அருகே சென்று கொண்டிருந்த இருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனத்திற்க்கு வழிவிட்ட போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 3 பயணிகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
பெருந்துறை அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி செயல்படுகிறது. இங்கு ஈரோடு மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்துவருகிறார்கள். கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கமிட்டிக்கு பெயர் வைப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பெருந்துறை போலீசார் 4 பேரை கைது செய்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சேனாதிபதிபாளையம் பகுதியில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் உடனே பள்ளிக்கு விடுமுறை அறிவித்து, வந்த மாணவர்களை பள்ளி வாகனம் மூலம் திருப்பி வீட்டிற்கு அனுப்பி வைத்தது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சொந்த நூலகம் வைத்திருக்கும் தனி நபருக்கு, சொந்த நூலகத்துக்கான விருது, கேடயம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும். இதற்கு தங்கள் முழு முகவரியுடன், எத்தனை நூல்கள் வைத்துள்ளீர்கள், எந்த வகையான நூல்கள், எத்தனை ஆண்டுகளாக பராமரிக்கப்படுகிறது என்ற விவரங்களுடன் அக்டோபர் 14க்குள், 7598395352 என்ற வாட்ஸ்அப் எண் (அ) erodedistrictlibraryoffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 1,517 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சிலைகள் 48 இடங்களில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு, செப்டம்பர் 7 முதல் 13ஆம் தேதி வரை ஊர்வலம் நடைபெறும். இதற்காக 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என காவல்துறை வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு அந்தியூர் பேரூராட்சி பழனியப்பா வீதியில் செயல்படுத்தபட்டு வரும் அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.23.97 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் மேம்பாட்டு பணியில் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால சுன்கரா பார்வையிட்டு ஆய்வுசெய்தார். உடன் பேரூராட்சிகள் உதவிப் பொறியாளர் கணேசன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ் கண்ணா ஆகியோர் உடனிருந்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி ஆப்பக்கூடல் நால்ரோட்டில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கார்த்திகேயன், முருக பூபதி, ராஜேஷ் கண்ணா, ரமேஷ் கண்ணா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆப்பக்கூடல் சந்திப்பு பகுதியில் சாலையை இருபுறங்களிலும் 100 மீட்டர் விரிவுபடுத்தி சாலையின் நடுவில் தடுப்புகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு தமிழக அரசு 1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 1330 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டத்தில் ரூ.15000 வழங்கப்படுகிறது. இதற்கு ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளி மூலம் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து ஆக.31-க்குள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.