India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு வஉசி மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்த, சில்லரை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 24 மணிநேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த சந்தைக்கு, நாளை (1-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது. பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக தீர்த்தக்குடம் எடுத்து செல்வதற்காக, விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக, காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று திண்டலில் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் பேசினார். அப்போது அவர், பாஜக சதி திட்டங்களுக்கு முதல் தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும்தான். 2026ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை காண்போம் என்றார்.
ஈரோடு மாநகராட்சியில், விடுபட்ட மற்றும் நடப்பாண்டுக்கு உரிய (2024-2025) சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்த இன்று (மார்ச்.31) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று கடைசி நாள் என்பதால், வரி செலுத்தாதவர்கள் இன்று இரவு 10.30 மணிக்குள் வரி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று வரை 88% வரி வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆள்சேர்ப்பு 2025 ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 10 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 6 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் வனத்துக்குள் காட்டுத்தீ ஏற்பட்டால், அதை கண்டறிந்து அறிவிப்பு செய்யும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வனத்தீயை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ‘வனத்தீ கட்டுப்பாட்டு தெரிவிக்க அழைப்பு அறை’ அமைக்கப்பட்டு செயல்படுகிறது. ஏதாவது காட்டு தீ ஏற்பட்டால் 1800-425-1108 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம் வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
பவானி அருகே சித்தோடு, போன வாய்க்கால் பகுதியில், தனியாருக்கு சொந்தமான, கெமிக்கல் கொண்டு வந்த டேங்கர் லாரியை, யோகநாதன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு பேர், உள்ளே இறங்கி, அவற்றை கிளீன் செய்தபோது மயக்கம் அடைந்தனர். அவரை மீட்க சென்று வரும் மயங்கினார். உடனே பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அவர்கள் மூவரையும் மீட்டனர். அவற்றில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் ஏப்.2, 3ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்த 2 நாள்கள் மழை பெய்யவுள்ளது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை அறிவிக்கப்பட்டுள்ளதாள் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (SHARE பண்ணுங்க)
நம்பியூர் அருகே உள்ள அப்பியபாளையத்தைச் சேர்ந்த, பள்ளி மாணவன் ரோஹித் (13). இந்த மாணவர் தனது நண்பர்களான சதீஷ்குமார், ரித்தீஷ், ஹரி சுதன், மூவருடன் சேர்ந்து, அருகில் உள்ள குளத்திற்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது கால் தவறி குளத்துக்குள் விழுந்து விட்டனர். அருகில் இருந்து ஆடு மேய்த்த பெண் ஒருவர் மூன்று பேரை துண்டு போட்டு காப்பாற்றினார். ரோகித் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அந்தியூரில் பழமைவாய்ந்த மலைக்கருப்பசாமி கோயில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைதியான சூழலில் அமர்ந்திருக்கும், மலைக்கருப்பசாமி, ஒரு சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார். அனைத்துவித தடைகளையும் போக்கும் வல்லமை கொண்ட கருப்பசாமியை, வீரப்பன் அவ்வப்போது வந்து வணங்கி செல்வாராம். இங்கு பூஜை முடிந்து வழங்கப்படும் மூலிலைச்சாறை பெற மக்கள் அலைமோதுவார்களாம். இது பலவகை வியாதிகளை தீர்க்கும் என நம்பப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.