India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்க உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/5tTFr7CqZFNuwZ596 என்ற லிங்க் மூலம் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மனவளக்கலை டிரஸ்ட் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மனைவி நல வேட்பு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா நேற்று ஈரோடு கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட தம்பதியர் கலந்துகொண்டு மனைவிக்கு மலர் கொத்து கணவனுக்கு கனியும் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மன்ற நிர்வாகிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நேற்று மாநகராட்சி அரங்கில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எம்பி பிரகாஷ் கலந்துகொண்டார். பல்வேறு தீர்மானங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பும்போது கடும் விவாதம் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி வேலை நாளில், விற்பனை விவரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்கள் சரிபார்ப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) சனிக்கிழமை பணி நாளன்று அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முழுமையாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீட்டு வேலை செய்யும் தொழிலாளர் மற்றும் வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் சேரலாம் என ஈரோடு தொழிலாளர் ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் தெரிவித்துள்ளார். இதற்கு www.tnuwwb.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து நலவாரிய அட்டை பெற்று கொள்ளலாம். மேலும் தகவலுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை 0424 2275591, 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சத்தியமங்கலத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து இன்று மதியம் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. கோபி அடுத்த அரசூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீர் அந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே பேருந்தை சாலை ஓரத்தில் ஓட்டுநர் நிறுத்தினார். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை ) ஈரோடு மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு ஸ்டேட் பாங்க் ரோட்டில் அமைந்துள்ள புனித அமல அன்னை மாதா ஆலயத்தில் வேளாங்கண்ணி மாதா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நவநாள் வழிபாடு நாளை (சனிக்கிழமை )தொடங்க உள்ளது. செப்டம்பர் 8ம் தேதி அன்னை மாதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை திருவிழா சிறப்பு திருப்பலியும் தேர் பவனியும் நடைபெறும்.
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2025 முன்னிட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு-237, ஈரோடு மேற்கு-302, மொடக்குறிச்சி-277, பெருந்துறை-268, பவானி-289, அந்தியூர்-262, கோபி-296, பவானிசாகர் (தனி)-295 என மொத்தம் 2222 வாக்கு சாவடிகள் உள்ளது. இதில் 27-03-2024ன் பட்டியலின்படி மொத்தம் 19,66,496 வாக்காளர்கள் உள்ளனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் இறைச்சி கடை நடத்திவருபவர் ராஜா (65), இவரது தம்பி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தம்பி இறந்த துக்கம் தாளாமல் நெருஞ்சிப்பேட்டை கதவனை அருகே காவிரி ஆற்றில் குதித்து ராஜா தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அம்மாபேட்டை போலீசார் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.