Erode

News September 13, 2024

ஈரோடு BUS STAND-இல் அபராதம்!

image

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பஸ்களில் தடைசெய்யப்பட்ட ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா? அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறதா? கூடுதல் பயண கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் தலைமையில் நேற்று ஆய்வுசெய்யப்பட்டது. முறையான வழித்தட விவரம், கட்டண விவரம் இல்லாதது, சீட் பெல்ட் அணியாமல் பஸ்களை இயக்கியதாக 10 ஓட்டுநர்கள் மீது வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

News September 12, 2024

ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் பணி

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி ஹாலில், ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (14ம் தேதி) நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ஈரோட்டுக்கு அமைச்சர் 5 புது பஸ்கள் தொடங்கி வைப்பு

image

ஈரோட்டில் இயங்கிக் கொண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய 5 பேருந்துகளை (ஈரோடு To சேலம், ஈரோடு To கோவை , ஈரோடு To மைசூரு) தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி கொடியசைத்து துவங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் இருந்தனர்.

News September 12, 2024

ஈரோடு: இன்று கடைகள் அடைப்பு

image

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி சென்னிமலை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று கடை அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், பேக்கரிகள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் மருந்து, பால், காய்கறி கடைகள் செயல்பட்டன. இன்று மாலை நான்கு மணிக்கு அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.

News September 12, 2024

ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்களில், உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர் கல்விக்கு ஊக்கப்படுத்தும் வகையில், ‘உயர்வுக்குப் படி’ என்ற சிறப்பு முகாம், இன்று கோபி கலை அறிவியல் கல்லூரில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயனடையலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வாழ்த்து

image

2023-24ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.17.92 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முன்னாள் வங்கி இயக்குநர்களுக்கும், கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநருக்கும், அனைத்து நிலை பணியாளருக்கும் இணைந்து புதிய கூட்டுறவு வங்கி லாபகரமாக இயங்கிய உதவிய அனைத்து பணியாளர்களுக்கும் கிருஷ்ணராஜ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News September 12, 2024

ஈரோட்டில் ரூ.50 லட்சம் கல்விக்கடன்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் உயர்வுக்குப் படி 2024 முகாம் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற 148 மாணவ-மாணவிகளில் 43 பேரின் மேற்படிப்புக்காக கல்லூரியில் உடனடி சேர்க்கை வழங்கப்பட்டது. மேலும் கல்விக்கடன் மேளாவில் விண்ணப்பித்த 180 மாணவ, மாணவியர்களில் 20 பேருக்கு ரூ.50 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டது.

News September 11, 2024

ஈரோட்டில் பூண்டு விலை தொடர்ந்து உச்சம்

image

ஈரோடு மார்க்கெட்டில் சில்லரை விலையில் நாட்டு பூண்டு மற்றும் மலை பூண்டு ஒரு கிலோ ரூ.380 முதல் ரூ.420 வரையும் விற்பனையானது. இதனால் கிலோ கணக்கில் வாங்கும் பொதுமக்கள் அரை கிலோ, கால் கிலோ என்ற கணக்கில் பூண்டினை வாங்கி சென்றனர்.பூண்டு மண்டி உரிமையாளர் கார்த்தி கூறியதாவது:ஜனவரி மாதத்திற்கு பிறகு பூண்டின் விலை குறைய துவங்கும். புது பூண்டு வரத்தாகும் வரை பூண்டின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றார்.

News September 11, 2024

ஈரோடு: மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி

image

ஈரோடு மாவட்டம் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுகள் சார்பில் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சந்திரா கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா, தன்னார்வலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

ஈரோடு: மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள்

image

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகரில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக வைத்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அன்னதானம் மற்றும் மேளதாளத்துடன் காந்திநகர் பொதுமக்கள் சார்பாக ஏழு இடங்களில் விநாயகர் சிலைகள்
பூஜை செய்து ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!