Erode

News April 2, 2025

ஈரோட்டில் வேலை வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (BANKING TRAINEE)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000- ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 2, 2025

பி.எம்.கிசான் திட்ட நிதி பெற உடனே பதிவு செய்யுங்க

image

ஈரோடு மாவட்ட விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தவணை நிதி பெற, வேளாண் அடுக்குத் திட்டத்தில் எந்தவித கட்டணமும் இன்றி வரும் ஏப்.8ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். உங்கள் விவசாய நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 2, 2025

ஈரோடு மாவட்டத்திற்கு மழை

image

தென்மேற்கு வங்கக்கடல் (ம) வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு நாளை(ஏப்.2) மழை பெய்யவுள்ளது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (SHARE பண்ணுங்க.)

News April 1, 2025

ஈரோடு: கனமழை அறிவிப்பு

image

ஈரோட்டில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, ஈரோடு மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 4, 5 ஆகிய தேதிகளில், மாவட்டத்தில் சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News April 1, 2025

அந்தியூர் வீரபத்திரசுவாமி திருக்கோயில்

image

ஈரோடு, அந்தியூரில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல், விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், ஆகிய பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று, வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் நீங்குமாம். இதை Share பண்ணுங்க.

News April 1, 2025

ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரி வசூல்

image

2024-2025 ஆம் ஆண்டுக்கான தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரிகளுக்கும் இன்று கடைசி நாள் என நேற்று அறிக்கை விடப்பட்டிருந்த நிலையில், வரி வசூலிக்க மண்டல வாரியாக 400 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், நடமாடும் வரி வசூல் மையமும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரியை செலுத்தியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 1, 2025

பண்ணாரி திருவிழா: போக்குவரத்து மாற்றம்

image

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திம்பம் ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் வாகனங்கள் டிஜி புதூர் 4ரோடு கடம்பூர் வழியாக செல்ல வேண்டும். கர்நாடக மாநிலத்திலிருந்து திம்பம் வழியாக ஈரோடு செல்லும் வாகனங்கள் ஆசனூர், கடம்பூர், டி.ஜி.புதூர் வழியாக செல்ல வேண்டும். வரும்6ம் தேதி முதல் 8ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2025

ஈரோடு இரவு காவலர்கள் ரோந்து பணி விவரம்

image

ஈரோடு மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்டத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவு நேர ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 31.03.2025 அன்று முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி இரவு ரோந்து பணிகளுக்கான அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட அதிகாரிகளை அவர்களது தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News March 31, 2025

சென்னிமலை அருகே விபத்தில் இளைஞர் பலி!

image

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று மாலை, மாரியம்மன் கோவில் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த, ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் நவீன், லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி, லாரிக்குள் விழுந்ததால், லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 31, 2025

தொழிற்பேட்டையில் தொழில் துவங்க அரிய வாய்ப்பு

image

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு, ஈரோடு தாட்கோ தொழிற்பேட்டையில், தொழில் துவங்க அரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. விருப்பம் உள்ள பல்வேறு இடங்களை, குறுகிய/நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க, அரசு தற்போது முன் வந்துள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் 04-04-2025 காலை 10 மணியளவில், ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம். இதை SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!