Erode

News September 20, 2024

ஈரோட்டில் வெயில் தாக்கம்: விலை கிடுகிடு உயர்வு

image

ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் லெமன் ஜூஸில் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர். இதனால் எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது; மேலும் எலுமிச்சையின் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு வஉசி மார்க்கெட்டில் எலுமிச்சம்பழம் கிலோ ரூ.220 ஆக உயர்ந்துள்ளது என மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

News September 19, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை

image

ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (செப்.20) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே எழுமாத்தூர், வெள்ளபெத்தாம்பாளையம், மண்கரடு, வே.புதூர், எல்லக்கடை, குலவிளக்கு, மின்னக்காட்டுவலசு, மொடக்குறிச்சி, வெப்பிலி, குளூர், பூந்துறை, வடுகப்பட்டி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2024

ஈரோட்டில் பெயர் சூட்டிய திருமா: என்ன பெயர்?

image

ஈரோட்டில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரஞ்சித்தின் பேரன் பிறந்ததை கேள்விப்பட்டு வரும் வழியில் வாகனத்தை நிறுத்தி மருத்துவமனை சென்று குழந்தையை கையில் எடுத்து “வளவன்” என்று பெயர் சூட்டி தாயை உடல் நலம் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார். அவரைக் கட்சியினர் வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.

News September 19, 2024

ஈரோட்டில் வேலை கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள டாக்டர்.ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரும் செப்.21ஆம் தேதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9444094274 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

ஈரோடு மாநகரில் அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்

image

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பொருட்டு 20.09.2024 முதல் மாநகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தலைமை வகித்தார். இதில் மாநகர காவல் (ம) போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.

News September 18, 2024

நியாய விலைக்கடையில் ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு, பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் ஆய்வு செய்தார். அங்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News September 18, 2024

ஈரோட்டில் அசத்திய சென்னிமலை மாணவிகள்!

image

முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டி ஈரோட்டில் வஉசி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் சென்னிமலை எம்பிஎன் பொறியியல் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.3000 ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் வசந்தி சுத்தானந்தன் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

News September 18, 2024

ஈரோடு: ரயில் பயணி தவறி விழுந்து உயிரிழப்பு

image

சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் குமார் (27), இவர் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பெங்களூருவில் உள்ள தனது உறவினரை பார்க்கச் சென்ற இவர் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூர் நோக்கி வந்துள்ளார். பெருந்துறை ரயில் நிலையத்தை கடந்து சிறிது தூரத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 18, 2024

ஈரோடு நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு

image

ஈரோடு நகரில் தினசரி போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஈரோடு நகருக்கு வரும் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில், காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்கள் ஈரோடு மாநகருக்குள் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகை நேற்று வைக்கப்பட்டது.

News September 18, 2024

ஈரோடு-செங்கோட்டை ரயில் இன்று முதல் ரத்து

image

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் இன்றுமுதல் அடுத்த மாதம் 7ஆம் தேதிவரை திண்டுக்கல் வரை இயக்கப்படுகிறது. மதுரை கூடல் நகருக்கும், சமயநல்லூருக்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே திண்டுக்கல்லிலிருந்து செங்கோட்டை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஆனால் செவ்வாய்க்கிழமை மட்டும் ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும்.

error: Content is protected !!