India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அந்தியூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்புளிச்சாம்பாளையம், மேற்குக்கும், கூத்தாடியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அந்தியூர் தெற்கு ஒன்றியத்தலைவர் சேகர் தலைமையில் பா.ம.க.வினர், சித்திரை முழுநிலவு மாநாட்டு அழைப்பிதழைக் கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். அப்படி மேற்குக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அழைப்பிதழைக் கொடுத்தபோது அவர்கள் மாநாட்டிற்கு உறுதியாக வருவதாக தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கஸ்தூரி ரங்கர் அனந்த சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கோப குணம் மாறும், மன நிம்மதி உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
ஈரோட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை(நீட்ஸ்) செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., படித்தோர், இளங்கலை பட்டம் பெற்ற, 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் மகளிர், சிறுபான்மையினர் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க இந்த <
ஈரோடு, தமிழக காவல்துறையில், 245 எஸ்.ஐ,.க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.,க்களாக பணியாற்றி வந்த ராம்பிரபு (ஈரோடு-தனிப்பிரிவு), சங்கர், சகாதேவன், பிரகாஷ் (ஈரோடு கியூ பிராஞ்ச்), ரம்யா(ஈரோடு சி.பி.சி.ஐ.டி.,), மேனகா (ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு) ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. பிறப்பித்துள்ளார்.
ஈரோடு: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
பெருந்துறை அருகே தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரகு (29). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரத்தைப் பறித்துச் சென்றது. இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்படுருந்தநிலையில் தலைமறைவாக இருந்த பால கண்ணன் (39) மற்றும் கல்லூரி மாணவரான கார்த்திகேயன் (20) ஆகிய இருவரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஈரோடு, பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் ,அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் ராஜ் இவரது மனைவி ஜானகி வயது 30, இவருக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணேஷ் ராஜ் மில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் திரும்பி நள்ளிரவு வந்த பொழுது அவரது மனைவி ஜானகி தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக்கூட்டம் நாளை 30.04.2025 ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்திற்கு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமையில் துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் பொறுப்பு தனலட்சுமி முன்னிலையில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறு மேயர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் 2025-2026ம் நிதியாண்டிற்கான வரி செலுத்துவதில் 5 சதவீதம் ஊக்கத்தொகைபெற நாளை ஏப்.30ம் தேதி கடைசி நாளாகும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தப்படி, சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற நாளை கடைசி நாளாகும். எனவே, மாநகராட்சியின் அனைத்து வசூல் மையங்கள் இன்றும், நாளைக்கும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட காவல் நிலைய எண்கள். ஈரோடு நகரம்-04242-217100, கொடுமுடி-04204-222358, மொடகுருச்சி-0424-2500225, பெருந்துறை-04294-220548, அந்தியூர்-04256-260250, பவானி-04256-230243, கோபிசெட்டிப்பாளையம்-04285-222041, நம்பியூர்-04285-267229, சத்தியமங்கலம்-04295-220228, தாளவாடி-04295-245228. உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை சார்ந்த கோரிக்கை மற்றும் புகாரை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.