Erode

News October 10, 2024

ஈரோட்டில் ரேஷன் கடை ஊழியர்கள் மூவர் சஸ்பெண்ட்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க கூட்டுறவு துறை அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் லதா, இந்திராணி, பிரபு ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மூவரையும் சஸ்பெண்ட் செய்து, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

News October 9, 2024

ஈரோடு ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு

image

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளில் 90 விற்பனையாளர், 9 கட்டுநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இப்பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன் https://drberd.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆள் சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

ஈரோட்டில் இலக்கிய திறனறித்தேர்வு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 37 மையங்களில், பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி என 9,443 மாணவ-மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதந்தோறும் ரூ.1,500 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 9, 2024

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது

image

திருப்பூரில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த விஜயா (35) என்பதும், பட்டாசு தயாரிக்கும் பணிக்காக திருப்பூர் வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் வீட்டின் உரிமையாளர் கார்த்திக் மற்றும் வெடி மருந்துகளை பதுக்கிய சரவணகுமார் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News October 9, 2024

ஈரோட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் அக்.19 தேதி வேளாளர் பொறியியல் (ம) தொழில்நுட்பகல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 86754-12356, 94990-55942 என்ற எண்ணை அழைக்கவும்.

News October 9, 2024

ஈரோட்டில் உரங்கள் போதிய இருப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச்சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக யூரியா, பொட்டாஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

News October 9, 2024

ஈரோடு ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு-செங்கோட்டை இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு மதியம் 2 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் நாளை அக்.9 திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். செங்கோட்டையில் இருந்து நாளை காலை 5 மணிக்கு ஈரோடு வரும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News October 8, 2024

ஈரோட்டில் இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்தின் கீழ், திருமணம் செய்து கொள்ள விரும்புவர்கள் அந்தந்த கோயில்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

ஈரோட்டில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர சிறப்பு முகாம்

image

ஈரோடு-சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முகாம் நடைபெறுவது வழக்கம். இம்முகாமில் இணையம் சார்ந்த ‘கிக்’ தொழிலாளர்கள் (ஆனலைன் இயங்குதள தொழிலாளர்கள்) உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

ஈரோடு மக்களே அத தொடாதீங்க! எச்சரிக்கை

image

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தங்களின் புகைப்படங்களை பதிவிட வேண்டாம். பார்டைம் ஜாப் என்று சமூக வளைதளங்களில் வரும் லிங்க்குகள், தங்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று வரும் போலி லிங்க்கை தொட வேண்டாம். சமூக வளைதளங்களில் பணத்தை இழந்தால் உதவி எண் 1930க்கு அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in வெப்சைட்டில் புகாரளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!