India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி அன்று (31.10.2024) ஈரோடு வளையக்கார வீதி மற்றும் மாணிக்கம்பாளையம் போன்ற நகரில் தென்னங்கீற்று கொண்டு வேயப்பட்டிருந்த கொட்டகைகள் தீப்பிடித்தன. இதுபோல் அவல்பூந்துறை, சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை என மாவட்டத்தின் பிற பகுதிகள் என 5 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக ஈரோடு தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,300 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 91.57 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 22.62 டி.எம்.சி., அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,700 கன அடி ஆகும்.
சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கூட்டமாக இருந்தது, அதே பகுதியை சேர்ந்த கோபால் (25), வினோத்குமார் (36) மது போதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ்சார் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆய்வாளர்கள் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருவரையும் அவர்கள் கைது செய்தனர்.
ஈரோடு அடுத்த திண்டலில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வேலாயுத சுவாமி (முருகன்) திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று (நவ.2) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 8ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. மேலும் இக்கோவிலில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் இருந்து பர்கூர் மலை பாதை வழியாக கர்நாடகா சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று பர்கூர் மலைப்பகுதி தக்கரை என்ற இடத்தில் 5 அடி பள்ளத்தில் கார் தவறி விழுந்தது. தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இருந்த ஐந்து பேர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார் நீலகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு கோட்டாட்சியராக பணியாற்றிய சதீஷ்குமார் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ரவி, ஈரோடு கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபி அருகே பச்சைமலையில், சுப்பிரமணிய சுவாமி (முருகன்) திருக்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், நடப்பாண்டு கந்தசஷ்டி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நாளை (நவம்பர் 2) தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவாக நாளை சஷ்டி விரதம் காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
தீபாவளியை ஒட்டி கடைகளில் தள்ளுபடி அறிவிப்பது வழக்கம். அதன்படி, தீபாவளிக்கு மறுநாளான இன்று, ஈரோட்டில் உள்ள பிரபல துணி கடையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே கடை முன் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்த காரணத்தால் அதிகாலையிலேயே விற்பனை தொடங்கப்பட்டது. கடை திறந்ததும் கூட்டத்துடன் துணிகளை மக்கள் வாங்கி சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி, பவானி கிளை தபால் நிலையங்களில் கங்கை புனித நீர் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம், அமாவாசை. உள்ளூர் திருவிழாவிற்கு கங்கை புனித நீர் தேவைப்படும் பொதுமக்கள் அங்கு சென்று 250 மி.லி., புனித நீரை ரூ.30 செலுத்தி வாங்கி கொள்ளலாம் என ஈரோடு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபால் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று (இரவு 7 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக (மஞ்சள் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.