Erode

News November 4, 2024

ஈரோட்டில் இன்றயை தலைப்பு செய்திகள்

image

➤ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடைபெற்றது. ➤கொடிவேரி அணையில் இன்று நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ➤நம்பியூர் அருகே தேனீ கொட்டியதில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ➤ஈரோட்டைச் சேர்ந்தவர்களுக்கு வரும் 8ஆம் தேதி ராணுவ சேர்க்கை முகாம் கோவையில் நடைபெறவுள்ளது. ஈரோட்டில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது.

News November 4, 2024

ஈரோடு திருவிழாவில் ஜெர்மன் நாட்டு சகோதரர்கள்

image

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள பீரேஸ்வரர் கோயில் சாணி அடி திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு ஜெர்மன் நாட்டு சகோதரர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டும் அவர்கள் திருவிழாவிற்காக மூன்று நாட்கள் முன்பாகவே வந்து இங்கு தங்கி நேற்று சாணி அடி திருவிழாவை பார்த்து ரசித்தனர். இவர்களோடு சேர்ந்து மேலும் ஆறு பேர் இந்த ஆண்டு விழாவில் பங்கேற்றனர்.

News November 4, 2024

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் முகாம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவம்பர் 4) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

News November 4, 2024

ஈரோடு இளைஞர்களே.. ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்ட இளைஞர்களுக்கு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு வரும் 8ஆம் தேதி தேர்வு முகாம் நடைபெற உள்ளதால் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2024

ஈரோடு: தேனீ கொட்டியதில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

image

நம்பியூர் அடுத்த மலையபாளையம் புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, கருப்புசாமி ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பறந்து வந்த மலைத் தேனீக்கள் திடீரென இருவரையும் கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் 2 பேரும் சத்தமிட்டுள்ளனர். எனவே அங்கு வந்த மற்ற 4 பேரையும் தேனி கொட்டியது. இந்நிலையில் 6 பேரும் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News November 4, 2024

ஈரோட்டில் வாகனங்களுக்கு அபராதம்

image

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்க இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசார், ஈரோடு பேருந்து நிலையத்தில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 90 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதுபோல் நேற்று முன்தினம் 80 வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.

News November 3, 2024

ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் ரூ.26.71 கோடி மது விற்பனை

image

ஈரோடு மாவட்டத்தில் 182 டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 30ம் தேதி ரூ.9 கோடியே 79 லட்சத்து 61 ஆயிரத்து 935க்கு விற்பனை செய்யப்பட்டன. 31ம் தேதி ரூ.9 கோடியே 82 லட்சத்து 6 ஆயிரத்து 495க்கும், 1ம் தேதி ரூ.7 கோடியே 9 லட்சத்து 81 ஆயிரத்து 265க்கும் மது, பீர் வகைகள் விற்றன. தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களில் ரூ.26 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 695க்கு மது விற்பனை செய்யப்பட்டன. 

News November 3, 2024

ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை

image

ஈரோட்டில் நித்ய என்ற பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்து 50 நாட்களேயானா பெண் குழந்தையை, நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதிக்கு, ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தற்போது புரோக்கர்கள் பானு, ராதாமணி, ரேவதி, செல்வி உட்பட 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 2, 2024

ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை

image

தீபாவளி விடுமுறை முடிந்து ஏராளமானோர் மீண்டும் பணி செய்யும் ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், வெளியூர் சென்று திரும்பும் நபர்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் செல்போன்கள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News November 2, 2024

ஈரோடு பாஸ்ட் புட் தயாரிப்பு இலவச பயிற்சி

image

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், துரித உணவு (பாஸ்ட் புட்) தயாரிப்பு இலவச பயிற்சி வகுப்பு வரும் நவம்பர் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!