India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் (காதுகேளாதவர்கள்) ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்ள வரும் அக்டோபர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதார் உடன் இணைந்த அலைபேசியுடன் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தீபாவளி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி ஆன்லைனில் 236 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து தற்போது வரை 93 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளனர்.
இந்திய தர நிர்ணயம் அமைப்பின் கோவை அலுவலகம் சார்பில் உலகத் தர நாள் கருத்தரங்கு நேற்று ஈரோட்டில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் 150-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
சென்னிமலையில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையானது ஒரே நாளில் 16 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என பொதுப்பணித்துறையினர் ஆற்றங்கரை ஓரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் என கூறினர்.
ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இன்று (17.10.2024) பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று (17.10.2024) சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கட்டில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கங்காபுரம் – டெக்ஸ்வேலி ஜவுளி விற்பனையின் ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது. இங்கு தீபாவளியை முன்னிட்டு ‘பிக் தீபாவளி பிக் டெக்ஸ்வேலி’ என்ற தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் அக்.2 முதல் 31 வரை டெக்ஸ்வேலி வரும் அனைவருக்கும் கூப்பன் வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு, 10 பேர் என்ற அடிப்படையில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டெக்ஸ்வேலி வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தாராபுரம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ஊரிலிருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்து தக்காளிகள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் ஈரோடு தினசரி மார்க்கெட்டின் தக்காளி கிலோ 80-க்கு விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 236 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 93 விண்ணப்பங்களை தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பியுள்ளனர். மீதியுள்ள விண்ணப்பங்கள் ஓரிரு நாட்களுக்குள் ஆய்வு செய்து அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை அருகே மர்ம விலங்கின் கால் தடம் ஆட்டுப்பட்டி அருகே பதிந்துள்ளதால் சிறுத்தை நடமாட்டமா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் சென்னிமலை அடுத்துள்ள சில்லாங்காட்டு வலசு குட்ட காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி விவசாயியான இவரது தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அருகே மர்ம விலங்கின் கால் தடம் பதிந்துள்ளது.இதை வனத்துறையினர் ஆய்வு செய்து சென்றனர்.
Sorry, no posts matched your criteria.