India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 5227 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 65-வது மாநில அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டது. இதில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கார், மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், மேயர் நாகரத்தினம், ஈரோடு எம்.பி., பிரகாஷ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர்.
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டபூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் அந்தோணி ஜெரால்டு(49). இவர் இன்று பள்ளிகள் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மயங்கி விழுந்தார். உடன் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளில் 90 விற்பனையாளர், 9 கட்டுநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இப்பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன் https://drberd.in/ என்ற இணையதளம் மூலமாக நாளை மாலைக்குள் (நவம்பர் 7) விண்ணப்பிக்கலாம்.
கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், பச்சைமலையில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவத் திருவிழா நவம்பர் 2ஆம் தேதி வெகு சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் தினசரி ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகள் தினசரி நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நாளை காலையும், சூரசம்ஹாரம் நாளை மாலையும் நடைபெற உள்ளது.
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 8,463 கன அடியாக இருந்த நீர்வரத்து 11 ஆயிரத்து 368 கன அடியாக நேற்று உயர்ந்தது. அணை நீர்மட்டம், 94.88 அடி, நீர் இருப்பு, 24.9 டி.எம்.சி.யாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 1,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், 65வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள் ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, 10 மணிக்கு போட்டிகள் துவங்குகிறது. இதில் 38 மாவட்டங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவ-மாணவியர் 8,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
பெருந்துறை அடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஏரி கருப்பராயன் கோவில் அருகே இன்று காலை கோவை டூ ஈரோடு செல்லும் தனியார் பேருந்தும் விறகு ஏற்றிக் கொண்டு சென்ற லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி ஈரோடு வஉசி பூங்காவில் நேற்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஈரோடு யூஆர்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கௌசிகா என்ற மாணவி நான்கு பிரிவுகளில் பங்கேற்று நான்கு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு முதல்வர், பள்ளியின் தாளாளர், மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர், சமூக பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு erode.nic.in என்ற ஈரோடு மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன் நவம்பர் நவ.15ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4, வார்டு எண்.53, இரயில்வே காலனி உயர்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கட்டப்பட்டுவரும் புதிய வகுப்பறைகள் கட்டுமான பணி குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடன் மாநகராட்சி ஆணையாளர் மனீஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.