Erode

News November 8, 2024

அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

image

ஈரோடு  ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று (8/11/24) நடைபெற்றது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.என்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். உடன் எஸ்.பி., ஜவகர், ஆணையாளர் மனீஷ் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 8, 2024

பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம், அனைத்து தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நாளை (9/11/24) நடைபெற உள்ளது. இதில் புதிய ரேஷன் கார்டு பெறவும், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல் போன்ற கோரிக்கை மனுக்களை மக்கள் வழங்கி தீர்வு பெறலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

ஈரோடு: மரம் அறுக்கும் மில்லில் தீ விபத்து

image

ஈரோடு கனிராவுத்தர்குளம், பாரதி நகரில் முத்துசாமி மரம் அறுவை மில் உள்ளது. இந்த மரம் அறுக்கும் மில்லில் இருந்து அதிகாலை 3 மணி அளவில் கரும்புகை வெளிவந்தது மேலும் தீயில் பற்றி எரிந்துகொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

News November 8, 2024

ஐடிஐ பயிற்சி முடித்தோருக்கு தொழிற்பழகுநர் பயிற்சி

image

ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பயிற்சியாளர்கள் தங்கள் ஆவணங்களுடன் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

ஈரோடு: சமூக நலத்துறையில் வேலை

image

ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை erode.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நாளை (9.11.2024) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News November 7, 2024

இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சென்னிமலையில் இரவு சூரசம்ஹார நிகழ்வு ➤ஆசிரியர் உயிரிழப்பு: அமைச்சர் இரங்கல் ➤ஈரோட்டில் மாநில அளவிலான தடகளப் போட்டி ➤பாதுகாப்பை பலப்படுத்த 428 கண்காணிப்பு கேமராக்கள் ➤ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி ➤பச்சை மலையில் மண்சரிவு: வாகனங்கள் செல்ல தடை

News November 7, 2024

ஆசிரியர் உயிரிழப்பு – அமைச்சர் இரங்கல்

image

அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் உயிரிழந்ததற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

News November 7, 2024

திண்டல் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு

image

திண்டல் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது. கடந்த இரண்டாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி மூன்று வேலையும் சிறப்பு ஆதாரனை பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை திருக்கோயிலில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி சுகுமார், மற்றும் அரங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.

News November 7, 2024

ஈரோடு: மாதம் ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. இதில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். ஈரோட்டில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 80728-28762, 90258-08570 அழைக்கலாம்.

News November 7, 2024

ஈரோடு பச்சை மலையில் மண்சரிவு: வாகனங்கள் செல்ல தடை

image

கோபி அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால், பச்சைமலை மலைப்பாதையில் உள்ள கோசாலை அருகே, கிழக்கு பகுதியில் சமீபத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் அவ்வழியே வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என கோவில் கமிட்டியினர் கூறுகின்றனர்.

error: Content is protected !!