Erode

News April 7, 2025

ஈரோடு மக்கள் கவனத்திற்கு

image

சத்தி: பண்ணாரி அம்மன் திருக்கோவில் குண்டம் ஏப்.8ந்தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பெண்கள் நகை அணிவதை தவிர்க்கவும், குழந்தைகளை கையில் (அ) தோலில் சுமந்து செல்லவும், ஆண்கள் செல்போன், பணத்தை மேல் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்கவும், அறிமுகம் இல்லாத நபரிடம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டாம் என சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை கடைபிடிக்குமாறு ஈரோடு மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. (SHARE)

News April 6, 2025

ஈரோட்டில் 3 மாதத்தில் 896 பேருக்கு காசநோய் பாதிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில், 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 19,600 பேருக்கு சளி பரிசோதனை செய்து, 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சை மூலம் இதுவரை, 877 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கடந்தாண்டுகளைவிட இந்தாண்டு இறப்பு விகிதம் குறைந்துள்ளது இவ்வாறு கூறினர்.

News April 6, 2025

ஈரோட்டில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்!

image

கொடுவேரி அணை- கோடை வெப்பத்தை தணிக்க சிறந்த இடம். வெள்ளோடு பறவைகள் சரணாலயம் -பறவைகளை பார்த்து ரசிக்கவும், படகு சவாரி செய்யவும் நல்ல ஸ்பாட். பவானிசாகர் அணை- அடர்ந்த காடுகளுக்கு நடுவே பொறித்த மீனுடன் அணையை பார்த்து ரசிப்பது நல்ல அனுபவத்தை தரும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் – புலி உள்ளிட்ட அரிய வகை வன விலங்குகளை பார்த்து மகிழலாம். இந்த விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 6, 2025

108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலை வாய்ப்பு

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இன்று (ஏப்.,6) 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 108 வாகன ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. மேலும், தகவலுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 5, 2025

ஈரோடு அருகே ஒருவர் தற்கொலை!

image

ஈரோடு கோட்டை கோவலன் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (33). ஈஸ்வரன் கோவிலில் பூக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் குடிபோதையில் வீட்டுக்கு சென்றதால், மனைவி கண்டித்துள்ளார். இதனால் தியாகராஜன் விஷம் குடித்தார். சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.

News April 5, 2025

ஈரோட்டிற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடை கொண்டு போங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 5, 2025

ஈரோடு: ஆம்புலன்ஸில் வேலை! நாளை நேர்காணல்

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நாளை (ஏப்.,6) 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 108 வாகன ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. மேலும், தகவலுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 5, 2025

ஈரோட்டில் பலத்த மழை 

image

ஈரோடு, பவானி வட்டம் மைலம்பாடி, நாராயணபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வானிலை அறிவிப்பின்படி மாலை பலத்த காற்று வீசியது. தொடர் நிகழ்வாக இரவு 9.40 மணியளவில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியில் மழை நீர் சாலையில் தேங்கி நின்றது. இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். ( SHARE பண்ணுங்க)

News April 4, 2025

பர்கூரில் இளைஞர் கொலை: 2 பேர் கைது!

image

ஈரோடு, பர்கூர், தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியான பாலாற்று பகுதியில், கடந்த 29ஆம் தேதி, எரிந்த நிலையில் சக்திவேல் (25), என்பவரது உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பர்கூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் சக்திவேலை கொலை செய்த, கிருஷ்ணகிரியை சேர்ந்த, வெங்கடேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இரண்டுபேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். 

News April 4, 2025

ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

ஈரோடு, சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில், குண்டம் திருவிழா, வரும் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு, வரும் 8 ஆம் தேதி ஒருநாள், ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!