Erode

News November 23, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ ஈரோட்டில் அமரன் படம் பார்த்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ➤ குவாரி வெடி விபத்து வழக்கில் தேடப்பட்டவர் கைது ➤ சத்தி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து ➤ கோபி வாய்க்காலில் கிடந்த ஆண் சடலம் ➤ பெண்கள் கபாடி போட்டி: அமைச்சர் துவங்கி வைப்பு ➤ பவானிசாகர் பேரூராட்சியில் சிசிடிவி துவக்க விழா ➤ ரூ.13.20 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை ➤ ஈரோட்டில் பழங்குடியின மக்களுக்கு 25, 26ல் சிறப்பு முகாம்

News November 23, 2024

ஈரோடு: தேசிய அளவில் சாதித்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

image

தேசிய அளவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கபடி போட்டி மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது, இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஹரியானா அணியை எதிர்கொண்டது, ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தங்க பதக்க வாய்ப்பை இழந்தது, இதனால் தமிழ்நாடு அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது, வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக அணியினர் நேற்று ஈரோடு வந்தனர், ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News November 23, 2024

ஈரோட்டில் அமரன் படம் பார்த்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்

image

ரவுண்டு டேபிள் இந்தியா எனும் அமைப்பின் மூலமாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மறுவாழ்வு இல்லத்தில் பயிலும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈரோடு பஸ்நிலையம் அருகிலுள்ள உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய கதையான, சிவகார்த்திகேயன் சாய்பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள அமரன் திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.

News November 22, 2024

ஈரோடு: 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

image

சூழலியல் மாற்றம் காரணமாக தற்போது மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 20 நாட்களில், மாநகராட்சி பகுதியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், போதிய மருந்துகள் இருப்பில் உள்ளது என மாநகர நகர்நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

ஈரோடு: வாக்காளர் சிறப்பு முகாம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை (நவ.23) மற்றும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

News November 22, 2024

முதன்மை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை முதன்மை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 22, 2024

ஈரோட்டில் நாளை மக்களைத் தேடி மாநகராட்சி முகாம்

image

ஈரோட்டில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் நாளை (23.11.2024) திண்டல், பரிமளம் மஹாலில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் மண்டலம் 3ல் உள்ள மக்கள் மற்றும் 10, 19, 30, 31, 48, 49 ஆகிய வார்டுகளில் உள்ள மக்கள், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாநகராட்சி ஆணையாளர் மணிஷ், கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 22, 2024

யானைகள் தாக்கியதில் ஓராண்டில் 13 பேர் பலி

image

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என இரு வனக் கோட்டங்களில் 10 வனச் சரகங்கள் உள்ளன. 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் தலமலை வனப் பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News November 22, 2024

பரோட்டா வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை

image

அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை படகு வீதியை பகுதி சேர்ந்த கல்லுரி மாணவர் கிரி (19). இவர் நாமக்கல் தனியார் கல்லுரியில் பயின்று வருகிறார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கிரி தன் தாய் லக்கேஸ்வரி-யிடம் நேற்று பரோட்டா கேட்டுள்ளார். அதற்கு இந்த நேரத்தில் பரோட்டா கிடைக்காது, என்று சொல்லி இருக்கிறார். இதனால் கோபித்துக் கொண்ட கிரி வீட்டினுள் சென்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

News November 21, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ சென்னிமலையில் கைத்தறி தொழில் முடக்கம் ➤ பஸ்சில் மருத்துவ மாணவியிடம் அத்துமீறல் ➤ பெருந்துறையில் ரூ.2.80 கோடிக்கு கொப்பரை ஏலம் ➤ ஈரோட்டில் கழுதை பால் விற்பனை ஆரம்பம் ➤ 32 அடியை எட்டிய வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ➤ அம்மாபேட்டையில் நாளை மின்நிறுத்தம் ➤ ஈரோடு மாணவர்கள் மாநில அளவில் சாதனை ➤ தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை ➤ ரூ.3.31 கோடி மதிப்பில் சுகாதார நிலையக் கட்டிடங்கள் திறப்பு

error: Content is protected !!