Erode

News April 9, 2025

ஈரோடு: கடன் பிரச்சனையை தீர்க்கும் கால பைரவர்!

image

ஈரோடு ஆவல்பூந்துறை, ராட்டை சுற்றிபாளையத்தில், 39 அடி உயர பிரமாண்ட சிலையுடன் கூடிய, கால பைரவர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 9, 2025

பெருந்துறை அருகே விபத்து 

image

பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பைபாஸ் பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அதனால் அருகில் அமைக்கப்பட்டுள்ள சர்விஸ் சாலையில் மாற்றி விடப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து கேரளா சென்ற கண்டெய்னர் லாரி நேற்று அதிகாலை நிலை தடுமாறி, பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

News April 9, 2025

போலீஸ் ஆக ஆசையா? இங்கு போங்க!

image

ஈரோடு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.,) தாலுகா மற்றும் ஆயுதப்படை உட்பட 1,299 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை, 96552-20100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் மே.31ம் தேதி வரை செயல்படும்.

News April 9, 2025

ஈரோட்டில் மதுக்கடைகளை மூட உத்தரவு

image

ஈரோடு மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், மகாவீரா் ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்ற மதுகூடங்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.

News April 8, 2025

ஈரோட்டிற்கு உள்ளூர் விடுமுறை

image

ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.8) ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் கோபால் சுன்காரா உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க.)

News April 7, 2025

வாலிபரை எரித்து கொன்ற வழக்கில் 3வது நபர் கைது

image

பர்கூர் வனப்பகுதியில் மார்ச் 30ம் தேதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரிந்தது. இந்த வழக்கில் வெங்கடேஷ் (32) மற்றும் ராஜேந்திரன் (48) என்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குமார் என்பவரை பர்கூர் போலீசர் தற்போது கைது செய்துள்ளனர்.

News April 7, 2025

பெருந்துறை அருகே விபத்து: 20 பேர் காயம்

image

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் பிரிவு அருகில் மேம்பால பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். பேருந்தை அதிவேகத்தில் இயக்கியதால் பேரிகார்டு பகுதியில் திருப்ப முடியாத நிலையில், அதன் மீது மோதி மண் குவியல் மீது ஏறி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.

News April 7, 2025

ஈரோட்டில் 3 மாதங்களில் மட்டும் 19 பேர் பலி

image

ஈரோடு ரயில் நிலையங்களை சுற்றி கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிகாரி தெரிவித்தார். மேலும் 18 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரும்பாலனோர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடிபட்டு உயிரிழந்ததாகவும், இது போன்ற விபத்துகளை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

News April 7, 2025

இறைச்சி சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

image

ஈரோடு, பவானியைச் சேர்ந்த முனீஸ் என்பவரது மகள் வர்ஷினி (13). இவருக்கு நேற்று இறைச்சி சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்ய பவானி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காலதாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் அந்தியூர் பவானி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News April 7, 2025

ஈரோடு: அங்கன்வாடியில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 91 அங்கன்வாடி பணியாளர், 12 குறு அங்கன்வாடி பணியாளர், 36 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.விண்ணப்பங்களை காலி பணியிடம் உள்ள குழந்தைகள் மையம் இருக்கும் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஏப்.,24குள் சமர்பிக்க வேண்டும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும்.

error: Content is protected !!