India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பழங்குடியினர் நலத்துறை மூலம் பள்ளி குழந்தைகளை அவர்களது இல்லங்களிலிருந்தே அழைத்து வர கடந்த மாதத்தில் பள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 வாகனங்களில் ஆசனூர் பள்ளிக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் பயண நேரத்தில் வாகனத்தில் நூலை படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவும் இந்த வாகனத்தில் சிறார் நூலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

ஈரோடு மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <

ஈரோடு மக்களே, உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களான கார்டு எண், காலாவதி தேதி, CVV போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம். வங்கி (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உங்களது OTP, கடவுச்சொல் போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் மின்னஞ்சல் (அ) தொலைபேசி மூலம் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930-ஐ தொடர்பு கொள்ளவும்.

ஈரோடு மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

ஈரோடு மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <

ஈரோடு மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

சேலம் மாவட்டம், சித்தூர் மக்கள் காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 36. அரச்சலூர் அருகே நாச்சிவலசில் மூர்த்தி என்பவரிடம், ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். அரச்சலூர் அருகே சில்லாங்காட்டு வலசில், எல்பிபி வாய்க்காலில் வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை குளித்தார். அப்பொழுது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னிமலை அருகே சேமலபாளையத்தில் மிதந்த உடலை, தீயணைப்புத் துறையினர் நேற்று மாலை மீட்டனர்.

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பேரோடு, கங்காபுரம், கொங்கம்பாளையம், மொக்கையம்பாளையம், சடையம்பாளையம், கவுண்டம்பாளையம், சூரிப்பாறை, ஆலுச்சாம்பாளையம், தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, வைரமங்கலம், ஜம்பை, சலங்கபாளையம், பெரிய, சின்ன மோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், புன்னம், எலவமலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு தொப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் வெளியே லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அதிகாலை 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, லாரியில் இருந்த பேட்டரியை சக்திவேல் என்பவர் கழட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மடக்கிப்பிடித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.