India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உதவியாக பணியாற்றும் ஊர்க்காவல் வீரர்களுக்கான பணியிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள ஊர்க்காவல் படை வீரர்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 14.11.25 முதல் 20.11.25 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 21.11.2025 மதியம் 2 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

பவானிசாகர் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பகுதியில் கூலி தொழிலாளி நாகராஜன். சாலையை கடக்க முற்பட்ட போது பவானிசாகரில் இருந்து புளியம்பட்டி நோக்கி வந்த பிக்கப் வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<

ஈரோடு மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <

அந்தியூர் அருகே உள்ள நகலூர் வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் வயது 25 இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் உயிர் இழந்தார் இது குறித்து அந்தியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கூலமூக்கனூர் கோவிலுக்கு வந்த ஒரு பெண் மதுபோதையில் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த கவினை சந்தித்தார். இது தொடர்பாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் அருகிலுள்ள பேக்கரியில் இருந்து இரு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை திருடியிருப்பது தெரிய வந்தது. சிறுவலூர் போலீசார் குற்றச்செய்தியை விசாரித்து அவரை கைது செய்தனர்.

சென்னிமலை, வெள்ளோடு அடுத்துள்ள கனகபுரம் வேப்பங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜ் – சரோஜா தம்பதி இவர்கள் இளைய மகன் ரமேஷ் வயது 22 , இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை அவரது வீட்டில் வளர்த்த வளர்ப்பு நாய் கடந்த 20 நாட்களுக்கு முன் கடித்து விட்டது. அவர் தடுப்பூசி போட்டும் அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏளுர் பகுதியைச சேர்ந்தவர் தங்கவேல். இவரது தோட்டத்தில் பாறைகளை வெடிவைத்து தகப்பதற்காக உரிமம் பெறாமல் ஜெலட்டின் குச்சிகள் 36 நான் டெட்டர்னேட்டர் 8 மற்றும் கம்ப்ரசர் வாகனம் ஒன்று ஆகியவற்றை கொண்டு தனது தோட்டத்தில் உள்ள பாறைகளை வெடிக்க வைக்க முயன்ற பொழுது உரிய அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதால் அதை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து இது சம்பந்தமாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.