India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரலேகா(30). இவரது வீட்டில் நேற்று(செப்.14) காலை சமையல் செய்வதற்காக வீட்டுக்குள் சென்ற போது பாத்திரம் கீழே விழுந்து உள்ளது. அப்போது அங்கே பாம்பு இருந்தது தெரிய வந்தது. அலறி அடித்து வெளியே வந்த சந்திரலேகா அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் மோகன் என்பவரிடம் தெரிவித்தனர். அவர் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பை பிடித்து வனத்தில் விட்டார்,
ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை, கொள்ளை, போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள், காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா, புகையிலை, போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.
ஈரோடு மக்களே, ▶️இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில், காலியாக உள்ள 48 ‘ஆசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
▶️இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது.
▶️சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும்.
▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
▶️கடைசி தேதி 24.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!
*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வரும், 17ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணாக்கர்கள், ஏற்கனவே கல்லுாரியில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற <
ஈரோட்டில் மாநில நெடுஞ்சாலையாக இருந்த வெள்ளகோவில் ரோட்டை வெள்ளகோவில் – சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், தற்போது வெள்ளகோவில் – சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னியம்பாளையம் முதல் நொய்யல் ஆற்று பாலம் வரை ரூ.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் வட்டம், கொள்ளேகால் செல்லம்பாளையம் சாலையில் நால்ரோடு முதல் கர்கேகண்டி வரை சாலை புனரமைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், சாம்ராஜ்நகர், கூடுதல் துணை ஆணையாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால், 15.09 முதல் 25.09 வரை 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் பர்கூர் மலைப்பாதையில் சொல்லாமல் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லுமாறு ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு, காஞ்சிக்கோவிலில் விவசாயத் தோட்டத்தில், சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாக, பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்ற இருவரையும், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் 12 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 150லி ஊரலை அழித்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.