Erode

News November 5, 2025

ஈரோடு: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

News November 5, 2025

ஈரோடு: ரயில்வே வேலை! APPLY NOW

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.25,500-ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 5, 2025

தாளவாடி அருகே விபத்து

image

ஈரோடு, தாளவாடி இருந்து கெட்டவாடிக்கு இன்று காலை 40 மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து தொட்டமுதிகரை அருகே செல்லும் போது எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காயம் அடைந்தார். பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதாரம் ஆனாது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 5, 2025

ஈரோடு: மக்களுக்கு முக்கிய எண்கள்

image

காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர இருக்க வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. ( SHARE)

News November 5, 2025

ஈரோடு: கடன் பிரச்சனை நீங்கனுமா?

image

ஈரோடு மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் மிகவும் புனிதமான நாளாகும். இந்நாளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், செல்வ வளம் சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க)

News November 5, 2025

ஈரோடு: இலவச தையல் இயந்திரம்! APPLY லிங்க்

image

ஈரோடு மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <>கிளிக் செய்து<<>> பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.
4. மேலும், விவரங்களுக்கு 0424-2261405 எண்ணை அழைக்கவும். (SHARE செய்யுங்க)

News November 5, 2025

ஈரோடு அருகே பேருந்தில் இருந்து விழுந்தவர் பலி

image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (65). இவர், நேற்று முன்தினம் பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ் படியில் நின்று பயணித்துள்ளார். வண்ணங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது திடீரென நடராஜ் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த நடராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 5, 2025

ஈரோட்டில் இன்று முதல் அனுமதி வழங்கல்

image

கோபி அருகே கொடிவேரி அணைக்கட்டு மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இந்த அணைக்கட்டு பகுதியில் கடந்த 15நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் நீர் வரத்து அதிகமாக வந்ததால் மறு அறிவிப்பு வரும் வரை அணை தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்ததால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல அணை திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

சாலை விதிகளை மதிப்போம், பாதுகாப்பாக பயணிப்போம் சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் சாலை விபத்துகளைத் தவிர்த்து, உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதிருத்தல், செல்போன் உபயோகத்தைத் தவிர்த்தல், மற்றும் போக்குவரத்து சிக்னல்களைப் பின்பற்றுதல் போன்ற விழிப்புணர்வை ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News November 4, 2025

ஈரோடு மாவட்ட இரவு காவலர் ரோந்து பணி விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!