Erode

News November 12, 2025

ஈரோடு: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <>கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

ஈரோட்டில் 53 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை

image

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஈரோடு மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொழிலாளா், எடையளவு விதிமீறல்கள் குறித்து கடந்த அக்டோபா் மாதம் 145 கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் எடையளவு விதி, தொழிலாளர் விதி மீறல் தொடா்பாக 53 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

News November 12, 2025

ஈரோடு: கடன் தொல்லையா இன்று இங்க போங்க!

image

ஈரோடு ஆவல்பூந்துறை, ராட்டை சுற்றிபாளையத்தில், 39 அடி உயர பிரமாண்ட சிலையுடன் கூடிய, கால பைரவர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News November 12, 2025

ஈரோடு: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய தகவல்!

image

ஈரோடு மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

ஈரோடு: சுங்க வரித்துறையில் சூப்பர் வேலை!

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது, மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 12, 2025

சென்னிமலை அருகே பள்ளி மாணவன் விபரீத செயல்

image

சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி, ஒட்டங்காடு கோபால்-திவ்யா தம்பதியின் மகன், கெளரிஸ் (12) தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டு கட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 10 நிமிடம் கழித்து சிறுவனின் அம்மா வீட்டுக்கு பின்புறம் உள்ள கட்டுத்தரைக்கு சென்று பார்த்தபோது வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News November 12, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (11.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம்-1930 மற்றும் குழந்தைகள் உதவி-1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 12, 2025

அம்மாபேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

அம்மாபேட்டை வட்டார பகுதி மக்களுக்காக இன்று (12/11/25) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஆனைகவுண்டனுார், ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம்
வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நாளை (நவ.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, நேதாஜி மார்க்கெட் வணிக வளாகம், ஈரோடு (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4), ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் மண்டபம்-ஆனைகவுண்டனூர் (அம்மாபேட்டை வட்டாரம்), மாணிக்கம் முதலியார் திருமண மண்டபம்-சுள்ளிபாளையம்(பெருந்துறை வட்டாரம்), உக்கரம் சமுதாயக் கூடம், உக்கரம்(சத்தி வட்டாரம்) பகுதிகளில் நடைபெற உள்ளது.

News November 11, 2025

ஈரோடு: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

image

ஈரோட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!