Dindigul

News July 5, 2025

கூட்டுறவு வங்கியில் ஹோம் லோன் பெறுவது எப்படி?

image

▶️நீங்கள் அரசு வேலையிலோ, அரசு சார்ந்த நிறுவனத்திலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
▶️நிலையான வருவாய் ஈட்டும் தொழில் செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
▶️நீங்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தால் form 16 அல்லது சம்பள சான்றிதழ் அவசியம்.
உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்து கொள்ளவும்.(SHARE IT)

News July 5, 2025

திண்டுக்கல்லில் மாபெரும் சமையல் போட்டி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வதிலை எக்ஸ்பிரஸ் நடத்தும் மாபெரும் சமையல் போட்டி நாளை(ஜூலை 6) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தாடிக்கொம்பு ரோட்டில் அமைந்துள்ள விருதுநகர் நாடார் மஹாலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம் . இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுதொகை வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 95975 50786, 97886 81302, என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்

News July 5, 2025

திண்டுக்கல் மாணவர்கள் கவனத்திற்கு

image

திண்டுக்கல்: தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என முன்னாள் முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி ’தமிழ்நாடு நாள்’. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 10ஆம் தேதி காலை 9.30 மணி முதல் எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

திண்டுக்கல்லில் இன்று மின் தடை அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(ஜூலை 5) ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, தங்கச்சியாம்பட்டி, புலியூர்நத்தம், லெக்கையன் கோட்டை, வடகாடு மலைக்கிராமங்கள், அம்பிளிக்கை ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 3:00 வரையிலும், கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, வில்பட்டி, தாண்டிக்குடி, பெருமாள்மலை ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினருக்கு SHARE!

News July 5, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு,
தற்காலிக தொகுப்பூதியத்தில், பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள், உரிய கல்விச்சான்றுகளுடன், விண்ணப்பங்களை திண்டுக்கல் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ (அ) தபால் மூலமாகவோ வரும் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார்.

News July 4, 2025

திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்& அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News July 4, 2025

திண்டுக்கல்: இலவச Tally பயிற்சி!

image

திண்டுக்கல்லில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, கம்பியூட்டர் Tally பயிற்சி வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி, தங்குமிடம், சீருடை, உணவு, அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9442628434, 8610660402 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News July 4, 2025

வெள்ளுமா திண்டுக்கல் டிராகன்ஸ்?

image

திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. போட்டி என்.பி.ஆர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் திருப்பூர் தமிழன் அணியை எதிர்கொள்ளும்.

News July 4, 2025

திண்டுக்கல்: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது

image

திண்டுக்கல்: மணியக்காரன்பட்டி அடுத்த பூஞ்சோலை அருகே நேற்று இரவு பாஜக முன்னாள் மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் (எ) ரெண்டக் பாலன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி முன்பு சதீஷ், கஜேந்திரன் ஆகிய 2 பேர் சரணடைந்துள்ளனர்.

News May 8, 2025

பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!