Dindigul

News April 10, 2025

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட தனி மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் திட்ட அலுவலர்கள் தலைமையில் (12.04.2025 ) அன்று காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும். பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ரேஷன் கார்டு சம்மந்தமான தங்கள் கோரிக்கைகளை மனுகளாக வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News April 10, 2025

திண்டுக்கல்: மாணவர்களுக்கான ஒர் அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் ,மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்களின் கூட்டமைப்பு நடத்தும் இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான பரிசு தொகையுடன் கூடிய ஆன்லைன் தேர்வு வருகிற மே11ந்தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க www.obcrights.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 14தேதி ஆகும். மாணவர்களுக்கு ஷேர் பண்ணுங்க 

News April 10, 2025

கடன் சுமை நீக்கும் அற்புத கோவில்

image

திண்டுக்கல், ராமலிங்கம்பட்டி அருகே அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோயில், பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ள கருவறையில் முருகனை தரிசிக்கக் கூடிய சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இங்கு முருகனை தரிசிப்பதன் மூலம் தீராத கஷ்டம், தடைகள், குடும்பத்தில் சண்டை,கடன் சுமை போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

இளைஞர் விருது விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது 

image

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற www.sdat.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.விபரங்களுக்கு. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைப்பேசி வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்

News April 10, 2025

திண்டுக்கல் ராணுவத்தில் வேலை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.

News April 10, 2025

இறைச்சி விற்பனை தடை

image

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் இன்று (ஏப்.10) இறைச்சி விற்பனைக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி ஆகிய இறைச்சிக் கடைகள், ஆடு வதைக்கூடம் இன்று செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 9, 2025

திருமணத் தடை நீக்கும் சௌந்தரவல்லி தாயார்!

image

திண்டுக்கல்லில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயில். அழகர் கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் இங்குமதை செய்வதுண்டு. இங்கு சௌந்தர்ராஜ பெருமாளுடன் உள்ள கல்யாண சௌந்தரவல்லி தாயாரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 9, 2025

பணியின் போதே உயிரிழந்த போக்குவரத்து காவலர்!

image

வேடசந்தூர் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலன் இன்று(ஏப்.9) வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு செலுத்தும் பாதுகாப்பு பணிக்காக வரும் வழியில் மாரம்பாடி பிரிவு அருகே மயக்கம் வருவதாகக் கூறியுள்ளார். அப்போது, அங்கு இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News April 9, 2025

திண்டுக்கல்லில் அரசு வேலை!

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள DEO, Nurse, Health Inspector பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு . 8th, Any Degree, B.Sc, BDS, D.Pharm, Diploma, DMLT, ITI, MDS, MSW, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.34,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்.<<>> நாளை (ஏப்.10) கடைசி நாள் ஆகும்.

News April 9, 2025

வத்தலகுண்டு அருகே விபத்து

image

வத்தலகுண்டு அருகே பைக்கில் வந்த கொண்டு இருந்த மரியராஜ்- ராணி தம்பதி மீது, திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியது. இவ்விபத்தில் மனைவி ராணி (54) சம்பவயிடத்திலே உயிரிழந்தார். கணவர் மரியராஜ் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!