India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி ஆலய வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உடல் உழைப்பு கூலி கட்டுமான அனைத்து பொது தொழிலாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் கட்டணமில்லா இணைய சேவைகள் முகாம் 08.07.2025 செவ்வாய்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 வரை நடைபெற உள்ளது.
திண்டுக்கல்: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <<-1>>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திண்டுக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்!
காரைக்குடியை சேர்ந்தவர் ஸ்டாலின் (29). இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் நேற்று காரில் கொடைக்கானல் சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே அப்பாஸ்புரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார்கள் சாலையோரத்தில் இருந்த பாலத்தில் அடுத்தடுத்து மோதி நின்றது. இதில் காரில் வந்த 7 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் & முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம் 07.07.2025 குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, 08.07.2025 பழனி சிவகிரிப்பட்டி எஸ்கேஎம் மஹால், 09.07.2025 தொப்பம்பட்டி வீரகுமார் திருமண மண்டபம். 10.07.2025 அன்று வேடசந்தூர் சினேகா மஹால், 11.07.2025 வத்தலகுண்டு ஏஎம்எஸ் மஹால், 12.07.2025 திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி சபரி மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 5 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,
திண்டுக்கல், வேடசந்தூரில் அழகிய நாகம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் நாகம்மன். சுமார் 400 ஆண்டுகள் முன்பு கோயில் தோன்றியது. ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக நாகம்மன் உள்ளார். கோயிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு, தற்காலிக தொகுப்பூதியத்தில் பணிபுரிய, உரிய கல்விச் சான்றுகளுடன், விண்ணப்பங்களை திண்டுக்கல் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ (அ) தபால் மூலமாகவோ வரும் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
திண்டுக்கல்: நத்தம் பகுதியில் நேற்று(ஜூலை 4) இரவு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் திண்டுக்கல் அணி சென்னை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும் இந்த போட்டியில் சென்னை டிராகன்ஸ் வீரர் விமல் குமார் போட்டியின் 17ஆவது ஓவரில் 4,6,6,6,6,6 என 34 ரன்கள் விலாசி சாதனை படைத்தார்.
TNPL போட்டியில் நேற்று(ஜூலை 4) நடைபெற்ற திண்டுக்கல் – சேப்பாக்கம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர், இதையடுத்து நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் திருப்பூர் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் எதிர்கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்து கொள்ளலாம். அல்லது 0451-2433153ஐ அழைக்கவும். மேலும், தெரிந்து கொள்ள <<16949453>>கிளிக்.<<>> (SHARE IT)
Sorry, no posts matched your criteria.