Dindigul

News April 15, 2025

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

image

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் இன்று திடீர் உடல் நல கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த
மருத்துவர்கள் சீனிவாசனுக்கு உணவு செரிமான பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News April 15, 2025

குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

image

பழனி, புது தாராபுரம் ரோட்டில் நேற்று முன்தினம் ஒருவரை, மூன்று நபர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகார் அளித்த 2 மணி நேரத்திற்குள், குற்றவாளிகள் மூவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காவல்துறையின் இந்த மின்னல் வேக நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News April 14, 2025

திண்டுக்கல்: அம்மன் நகையை திருடிய பூசாரி !

image

திண்டுக்கல்: ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள காளியம்மன் கோயிலின் 10 பவுன் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல் செய்து தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூசாரியை எதிர்த்து ஊர் மக்கள் கோயிலை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News April 14, 2025

திண்டுக்கல்லில் உள்ள இமயமலை !

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை இமயமலையின் ஒரு பகுதி என ஒரு நம்பிக்கை உண்டு. இந்தப் பகுதியில் மிக உயரமான மலை என்றால் அது வெள்ளி மலை தான். இந்த மலையின் உச்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தைக் காண அரைமணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து சென்றால் கைலாயத்தையே கண்ட ஒரு அனுபவம் உங்களுக்கு கிட்டும். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 14, 2025

பாதி எரிந்த நிலையில் பெண் உடல் மீட்பு!

image

தருமத்துப்பட்டி-பன்றிமலை சாலையில் அமைதிச்சோலை அருகே 60 அடி ஆழத்தில் ஆதிமூலம் நீரோடை உள்ளது. இங்கு நேற்று மாலை கால்நடை மேய்ச்சலுக்குச் சென்ற சிலர், ஒரு உடல் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த ஒரு பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 13, 2025

திண்டுக்கல்: குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் பலி !

image

திண்டுக்கல் : சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுளிபட்டி அருகே உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்ற சோழகுளத்துபட்டியைச் சேர்ந்த பேபிஸ்ரீ (17), நாகசக்தி (12) ஆகிய 2 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாணார்பட்டி காவல்துறையினர் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2025

தடைகள் நீங்க தமிழ் புத்தாண்டில் முருகனை வணங்குங்கள்!

image

திண்டுக்கல்லில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் போன்ற பல சிறப்பு மிக்க முருகன் கோயில்கள் உள்ளன. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். மேலும் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

திண்டுக்கலில் நாளை புத்தக கண்காட்சி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் சார்பில் அம்பேத்காரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (ஏப்-14)புத்தக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நியூசெஞ்சுரிபுத்தக நிலையம், வடமதுரை அரசு பள்ளி அருகே, வேடசந்தூர் சிலை அருகே பழநி குமுதம் புக் சென்டர், நத்தம் கே.எஸ்.எஸ்.எம் காம்ப்ளக்ஸ் கலைஞர் நுாலக நூலக உள்ளிட்ட பகுதிகளில் புத்தக கண்காட்சி நடக்கிறது.

News April 13, 2025

திண்டுக்கல் மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில்“முதலமைச்சரின் “முதலமைச்சரின் மறுகட்டுமானத் திட்டம்” புதிய திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் வட்டார அலுவலகத்தில் நேரடியாக அல்லது ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) என்ற பெயரில் அஞ்சல் மூலமோ 25.04.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.

News April 13, 2025

ஒட்டன்சத்திரம் அருகே விபத்து; தாய் பலி மகள் காயம்!

image

ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி ஏ.பி. காலனியை சேர்ந்த மோகன்ராஜ் மனைவி சரோஜாவும் (43), மகள் கீர்த்தனாவும் (9), காமாட்சி அம்மன் கோயில் முன்பு நேற்று முன் தினம் இரவு நடந்து சென்றனர். அப்போது சிவகங்கையை நோக்கி சென்ற கார் நடந்து சென்ற சரோஜா மற்றும் கீர்த்தனா ஆகிய இருவர் மீதும் மோதியது. இதில் தாய் சரோஜா உயிரிழந்தார், கீர்த்தனா சிகிச்சையில் உள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!